-->

வீட்டு விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்


பூனை கனவில் வந்தால்


வீட்டு விலங்குகள் கனவில் வந்தால்


பூனை கனவில் வந்தால்

1.வீட்டு அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு காண்பது நல்லதல்ல.
2.பூனை வலமிருந்து இடமாக செல்வது அபசகுனம் ஆகும்.
3.பூனை இடமிருந்து வலமாக செல்வது போல கனவு வந்தால் வேலை தாமதம் ஆகும்.

4.பூனை இறந்துவிட்டது போல கனவு வந்தால் வழக்குகள் வெற்றி அடையும்.
கனவு பலன் வீட்டு விலங்குகள்
5.பொதுவாக பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.

நாய் கனவில் வந்தால்

  1. நாயை கனவில் காண்பது மிகவும் நல்லது.
  2. நாய் படுத்திருப்பது அல்லது அமர்ந்திருப்பது, அல்லது குரைப்பது போல கனவு வந்தால் நன்மை உண்டாகும்.
  3. நாய் கடிப்பது போல கனவு வந்தால் நம் உடல் நிலை பாதிப்படையும்.
  4. நாய் கனவில் வந்தால் கனவு கண்டவரின் கல்வியில் மேம்பாடு உத்தியோக உயர்வுதனவரவு போன்றவை அதிகரிக்கும்.

கனவு பலன்கள் நாய்
5. நாய் இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பம் வரும்.

ஆடு கனவில் வந்தால்

  1. ஆடுகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. இது கனவு கண்டவருக்கு தனவிருத்தியை உண்டாக்கும்.ஆட்டு கூட்டத்தை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.
  2. ஆடு நம்மை பார்த்து கத்தினால் நல்ல செய்தி வரும்.
  3. செம்மரி ஆட்டை கனவில் கண்டால் செல்வம் மேலும் பெருகும்.
  4. ஆட்டை கோயிலில் பலியிடுவது போல கனவு வந்தால் நம்முடைய வேண்டுதல்கள் பலிக்கும்.

காளை, பசு, எருமை போன்றவை கனவில் வந்தால்

  1. காளைகள் கனவில் வருவது நல்லதல்ல. இதனால் துன்பங்கள் வரும்.
  2. காளை நம்மை துரத்தினால் மரண பயம் ஏற்படும்.
  3. காளை நம்மை முட்டுவது போல கனவு வந்தால் விபத்து ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படலாம்.
  4. காளை நம்மை மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
  5. காளை நம்மை பார்த்து சீறுவது போல் கனவு கண்டால் பிறரின் மேல் நாம் கொண்ட அதிகாரம் குறையும்.
  6. இளங்காளைகள் கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
  7. பசு கன்று ஈனும் காட்சி கனவில் வந்தால் செல்வ வளம் ஏற்படும் என்று பொருள்.

கனவு பலன்கள் பசு

  1. பசுவை கனவில் காண்பது மிகவும் நல்லது.
  2. பசு மாடு வீட்டுக்குள் வருவது போல கனவு கண்டால் மிக நல்லது.
  3. பசுவையும் கன்றையும் ஒன்றாக கனவில் கண்டால் வீட்டில் சுபச் செய்தி வரும்.  
  4. வெள்ளை நிற பசு கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மிக பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.எருமையை கனவில் காண்பது நல்லதல்ல.
  5. அதே போல வீட்டில் எருமை நுழைவது போல கனவு வந்தாலும் நல்லதல்ல. இதனால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படும் என்று பொருள்.
  6. எருமை முட்டுவது போல் கனவு வந்தால் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும்.
  7. நம்மை நோக்கி எருமை வருவது போல் கனவு கண்டால் நமக்கு பிரச்னை மேல் பிரச்னை வரும். ஆனால்சிறிது நாட்களிலேயே பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  8. காளை மாடு, பசுமாடு, , குதிரை போன்றவைகள் கனவில் வந்தால் உங்கள் குடும்பம் மென்மேலும் மேன்மை பெறும் என்று அர்த்தம்.
  9. பசு கன்று போடுவது போல கனவு காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் கனவில் பார்ப்பது செல்வ வளத்தை உண்டாக்கும். 

கழுதை, குதிரை போன்றவை கனவில் வந்தால்

  1. கழுதையை நாம் கனவில் வந்தால் நன்மைகள் பெருகும். நம்முடைய கௌரவம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.

கனவு பலன்கள் கழுதை

  1. கழுதை நம்மை விரட்டுவது போல கனவு கண்டால் பயம் நீங்கும்.
  2. கழுதை அல்லது குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும். 
  3. குதிரை கனவில் வந்தாலோ அல்லது குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

கனவு பலன்கள் குதிரை

எலி,முயல் போன்றவை கனவில் வந்தால்

  1. சுண்டெலி கனவில் வந்தால், நீங்கள் செய்யும் முயற்சிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
  2. பெருச்சாளி கனவில் வந்தால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
  3. முயல் கனவில் வந்தால் பொருள் வரவு ஏற்படும்.
  4. முயலை கனவில் கண்டால் நல்ல பொருள் சேர்க்கை ஏற்படும்.

கனவு பலன்கள் முயல்

  1. முயல் விளையாடுவது போல கனவு வந்தால் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும்.
  2. முயல் கரி சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்புகள் ஏற்படும்.


இவற்றையும் படிக்கலாமே
பஞ்சபூதங்கள் கனவு பலன்
Previous Post Next Post