-->

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு பலன்கள் பஞ்சபூதங்கள்

நெருப்பு, தீ , சூரியன் கனவு பலன்கள்

  1. நெருப்பு கனவில் வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.
  2. பூஜை செய்யும் ஓமகுண்டத்தை கனவில் கண்டால் சகல ஐஸ்வர்யமும் சேரும் என்று பொருள்.
  3. தீ பிடித்து விட்டது போல கனவு வந்தால் தீமையான செய்திகள் வரபோவதன் அறிகுறியாகும்.
  4. நீங்கள் தீ மிதிப்பது போல் கனவு கண்டால், பெரும் சிக்கலில் மாட்டிகொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம்.
  5. தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.
  6. சூரியன் கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
  7. விளக்கு எரிந்து கொண்டிருப்பது போல கனவு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட போகிறது என்று பொருள்.
  8. சூரிய கிரகணம் ஏற்படுவது போல கனவு கண்டால் தீமை உங்களை சூழ போகிறது என்று அர்த்தம்.
  9. சூரிய கிரகணம் நீங்குவது போல கனவு கண்டால் உங்களை சுழுந்துள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
  10. உங்களை சுற்றி நெருப்பு எரிவது போல கனவு கண்டால், உடல் பலகீனம் சரியாகும்.
  11. நீங்கள் நெருப்பு பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களின் முன் கோபத்தால் நல்ல வாய்ப்பை நழுவ விடுவீர்கள்.

தண்ணீர் கனவு பலன்கள்

  1. தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் மிகுந்த பணவரவு உண்டாகும் என்று அர்த்தம்.
  2. இடியுடன் கூடிய மழை வருவது போல கனவு வந்தால், தேவையில்லாமல் செலவு ஏற்பட போகிறது என்று பொருள்.
  3. படகு அல்லது ஓடம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல் கனவு வந்தால் துக்க செய்தி வரபோவதன் அறிகுறியாகும்.
  4. ஓடிகொண்டிருக்கும் நதியை கனவில் கண்டால் நமக்கு ஏற்பட்டுள்ள துன்பம் அனைத்தும் ஓடி விடும் என்று அர்த்தம்.
  5. நீங்கள் கடற்கரையில் இருப்பது போல் கனவு வந்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் என்று பொருள்.
  6. நீங்கள் குளத்து நீரில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், உங்களிடம் இருந்த தரித்திரம் விலகி உங்களிடம் புது உற்சாகம் ஏற்படும்.
  7. குளத்தில் தாமரை அல்லது அல்லி பூக்கள் பூத்து இருப்பது போல கனவு கண்டால், தடையற்ற பணவரவு உண்டாகும்.
  8. குளத்தில் குளிப்பது போல கனவு வந்தால், உங்களின் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் தடுக்க இயலாது என்று அர்த்தம்.
  9. மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்தி என்று அர்த்தம்.
  10. ஆற்றுநீர், கடல் அலை போன்றவற்றை பிடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேர போவதன் அறிகுறியாகும்.
  11. வறண்டு போன குளத்தை கனவில் கண்டால், புது செலவுகள் அதிகம் உண்டாகும் என்று பொருள்.
  12. குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும்.
  13. குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால், உங்களிடமிருந்து தரித்திரம் விலகி ஓடும்.
  14. தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதிய நட்பால் நட்பால் சிரமம் ஏற்படும் என்று பொருள்.
  15. அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு வந்தால், பணவரவு அதிகமாக இருக்கும்.
  16. நீங்கள் தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், உங்களின் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும் என்று பொருள்.
  17. செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மை செய்ய பல பேர் வருவார்கள். 

நிலம் 

  1. பூமி குலுங்குவதுபோல கனவு வந்தால் நீங்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
  2. மலையை உடைத்து குடைவது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்று அர்த்தம்.
  3. நீங்கள் மலையில் இருந்து உருண்டு விழுவது போல கனவு கண்டால், ஒரு பெரிய ஆபத்து உங்களை நோக்கி வருவதாக அர்த்தம். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
  4. நீங்கள் மலை ஏறுவது போல கனவு கண்டால்,உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
  5. பசுமையான வயலை கனவில் கண்டால் மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும் என்று பொருள்.
  6. நீங்கள் மலை ஏறுவது போல கனவு கண்டால், நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
  7. நீங்கள் மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், பெரிய ஆபத்து உங்களை நோக்கி வருவதாக அர்த்தம்.
  8. நீங்கள் மலையை உடைப்பது போல கனவு கண்டால், உங்களின் பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் தவிடுபொடியாகும்.

காற்று

  1. தென்றல் வீசுவது போல கனவு கண்டால் உங்களின் எல்லா விருப்பங்களும் வெற்றிகரமாக நிறைவேறும் என்று பொருள்.
  2. பனி பெய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு துன்பம் வரப்போவதன் அறிகுறியாகும்.
  3. புயல், காற்று, சூறாவளி ஆகியவை வருவது போல கனவில் கண்டால் நோய்கள் உண்டாக போவதன் அறிகுறியாகும்.

ஆகாயம்

  1. பிரகாசமான நட்சத்திரத்தை கனவில் கண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று அர்த்தம்.
  2. நட்சத்திரங்கள் வானில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் நோக்கி செல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தம்.
  3. நிலவை மேக கூட்டம் மூடுவது போல கனவு வந்தால் புது பிரச்சனை ஆரம்பிக்க போவதன் அறிகுறியாகும்.
  4. மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  5. மேகக்கூட்டங்களை கனவில் கண்டால் சோதனையான காலகட்டத்தில் உள்ளீர்கள் என்று பொருள்.
  6. நீல நிற வானத்தை கனவில் கண்டால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று பொருள். ஆனால் சிவந்த வானத்தை கண்டால் நல்லதல்ல.
  7. வானவில்லை கனவில் கண்டால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
  8. ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும் என்று பொருள்.
  9. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
  10. நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  11. இடியுடன் கூடிய மழை பெய்வதைப் போல கனவு கண்டால், சொந்தகாரர்கள் சண்டைக்காரர் ஆவார்கள்.
  12. சந்திரனை,சூரியன் பிடிப்பது போல கனவு கண்டால் (கிரகணம்) யோகம் உண்டாகும்.

இவற்றையும் படிக்கலாமே




Previous Post Next Post