-->

காலா படத்தின் பாடலுக்காக 1 மில்லியன் குரல்களை பதிவு செய்த இசையமைப்பாளர்

1 மில்லியன் குரல்கள்

காலா
கபாலி படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வெளியாக இருக்கும் படம் ‘காலா’. மும்பையின் தாராவி பகுதியை மைய கருவாக கொண்டு காலா படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, நானா படேகர், சுகன்யா, அஞ்சலி பாட்டீல், பங்கஜ் திரிபாதி, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ரிலீஸ்

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில், சினிமா வேலைநிறுத்தம் காரணமாக படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டது. தயாரிப்பாளர் தனுஷ் ஜூன் 9 ஆம் தேதி காலா படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைத் தளங்களில் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படம் குறித்த மற்ற தகவல்களை கேட்டு வருகின்றனர்.

1  மில்லியன் குரல்கள்

இதனிடையே படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் கூறுகையில் ‘காலா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்களை பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு மில்லியன் மக்களின் குரல்களை ஒரு பாடலுக்காக ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்தது.
அதற்கான வாய்ப்பு எனக்கு காலா படத்தில் கிடைத்துள்ளது. எப்படி 1 மில்லியன் குரல்களைப் தேடிப் பிடித்தேன் என்ற தகவலை பின்னர் தெரிவிக்கிறேன், என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
Previous Post Next Post