-->

மரம்,செடி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு பலன்கள் மரம்


மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால்

  1. அத்தி மரம் உங்கள் கனவில் வந்தால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதை குறிக்கும்.
  2. ஈச்ச மரம் கனவில் வந்தால் சொந்த பந்தங்களிடம் விரோத மனப்பான்மை ஏற்படும்.
  3. தோட்டம் கனவில் வந்தால் குடும்பம் விருத்தியடைய போகிறது என்று அர்த்தம்.
  4. செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், நமக்கு நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
  5. செடி மற்றும் மரத்தில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
  6. துளசிச்செடி கனவில் வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று பொருள்.
  7. தோட்டத்தில் பூக்கள், பழங்கள் கொத்தாக இருப்பது போல கனவு வந்தால் குடும்பம் விருத்தி அடையும் என்று பொருள்.
  8. தோப்பில் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு காண்டால் வியாதிகள் வரும்.
  9. சப்பாத்திக்கள்ளி செடியை அழிவதாகக் கனவில் கண்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
  10. பட்டுப்போன மரத்தை கனவில் கண்டால், சோக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  11. பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.
  12. மரம் அல்லது செடி பசுமையாக இருப்பது போல் கனவு வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
  13. மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் நீங்கள் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம்.
    கனவு பலன்கள் செடிகள்
  14. நீங்கள் ஒரு மரத்தில் ஏறுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.
  15. மலர்களை கொத்தாக இருப்பது போல கனவு வந்தால் சொத்து சேர்க்கை ஏற்பட போகிறது என்று பொருள்.
  16. மலர்செடிகள், பூந்தோட்டம் நிறைய இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் வருங்காலம் சிறப்பாக இருக்க போகிறது என்று பொருள்.
  17. மருதாணி செடி கனவில் வந்தால் உங்களிடம் உள்ள நோய் நொடிகள் நீங்கி  உடல் பலமாகும் என்று பொருள்.
  18. முற்செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், பழைய பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.
  19. கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்று பொருள்.
  20. காய்களை நறுக்குவது போல கனவு வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் விலக போகிறது என அர்த்தம்.

இவற்றையும் படிக்கலாமே


Previous Post Next Post