-->
உணவு பொருட்கள் கனவில் வந்தால்
- பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் வரவு
உண்டாகும்.
- விருந்தில் உண்பது போல் கனவு கண்டால்
திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும்.
- இறைச்சி சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று
பொருள்.
- மீன் இறந்து கிடப்பது போன்றோ கருவாட்டையோ கனவில் கண்டால் பகைவர்களின்
தொல்லை ஏற்படும்.
- அரிசி சாதத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று
அர்த்தம்.
- அரிசியைக் கனவில் கண்டால், செய்யும் தொழில்
அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்
- காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் உழைப்பிற்கு
தகுந்த ஊதியம் கிடைக்கும் என்று பொருள்.
- டீ குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்த நண்பர்களை சந்திக்கும்
வாய்ப்பு கிடைக்கும் என்று பொருள்.
- காப்பி குடிப்பது போல கனவு கண்டால் சுப செய்தி வரபோகிறது என்று
அர்த்தம்.
- கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ விருத்தி ஏற்படும் என்று
அர்த்தம்.
- கோழி முட்டையை கனவில் கண்டால் தொழில் மற்றும் விருத்தி ஏற்படும் என்று
அர்த்தம்.
- முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால்
வறுமை உண்டாகும்.
- உப்பை கனவில் கண்டால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று அர்த்தம்.
- வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை உண்டாகும்.
- தயிர் சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக
போகிறது என்று பொருள்.
- பருப்புகளை கனவில் கண்டால் பகைவர்கள் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள்
என்று அர்த்தம்.
- புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்மை பிடித்த
துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.
- பட்டாணியை கனவில் காண்பது வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற போவதன்
அறிகுறியாகும்.
- ரொட்டி சாப்பிடுவது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை வந்து சேரும்.
- சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் நம்முடைய நீண்ட நாள்
ஆசைகள் நிறைவேற போகிறது என்று அர்த்தம்.
- ஜாம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்ல காரியங்கள் நடைபெற போவதன்
அறிகுறியாகும்.
- பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் பல உண்டு.
- பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம்
சேரும்.
- இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்பட
போகிறது என்று அர்த்தம்.
- இனிப்புகளை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக
அமையும்.
- ஏலக்காயைக்
கனவில் கண்டால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள்.
- ஏலக்காயை
சாப்பிடுவது போல கனவு கண்டால், மிகுந்த செல்வம் வந்து சேரும் என்று அர்த்தம்.