-->

புனே மைதான ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசளித்த தோணி

புனே மைதானம்

சென்னை சூப்பர் கிங்க்ஸ்
சூதாட்ட பிரச்னையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்குப் பின் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் களமிறங்கி அசத்தி வருகிறது. சென்னையில் ஒருபோட்டி மட்டுமே விளையாடிய நிலையில், காவேரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற வேண்டிய அனைத்துப் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டது.
சொந்த மைதானம்
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்தமைதானமாக புனே மைதானம் விளங்குவதால், அதை புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் சிறப்பாக பராமரித்தனர். இதன் காரணமாக புனேயில் இந்தமுறை விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆடுகளம்
புனே மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்குக்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவில் ஒத்துழைத்ததற்கு ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இதை உணர்ந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினார். புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசும், புகைப்படத்தையும் அளித்து தோணி மைதான ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
வெகுமதி
இதையடுத்து, நேற்று முன்தினம் பஞ்சாபுக்கு எதிரான போட்டி தொடங்கு முன் ஆடுகளம் பராமரிப்பில் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தையும்  பரிசாக அளித்தார்.இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் கூறுகையில், புனே ஆடுகளத்தைச் சிறப்பாக பராமரித்து வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் சிறிய வெகுமதிதான் இது. இந்த பணம் வீரர்கள் அனைவரின் தரப்பில் இருந்தும், அணி நிர்வாகம் சார்பிலும் இருந்து தரப்பட்டது.
தோணி புனே ஊழியர்கள் பரிசளித்தார்

மைதான ஊழியர்களும் பரிசளித்தனர்

இதற்கிடையே கடந்த வாரத்தில் புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் தோனிக்கு ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தனர். அதில் தோனி, தனது மகள் ஜிவாவை தூக்கி வைத்து கொஞ்சுவதுபோல் இருக்கும் வரையப்பட்ட ஓவியத்தை பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post