-->

நீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்


நீர் வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால்


நீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால்


1.    மீன்கள் கூட்டம் கனவில் வந்தால் நல்ல செய்திகள் வரும்.
2.    மீனை பிடிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
3.    மீன் வலையில் சிக்கி துடிப்பதை போலவோ மீன் இறந்துவிட்டது போலவே கனவு கண்டால் ஏற்கனவே செய்த செயலால் அவமானம் வந்து சேரும்.
கனவு பலன்கள் மீன்கள்
4.    ஆமை கனவில் வந்தால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்று பொருள்.
5.    நீர்நிலையில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு வந்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
6.    முதலை கனவில் வந்தால் அறிவாற்றல் மேலும் பெருகும் என்று பொருள்.
கனவு பலன்கள் முதலை
7.    சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்வோம் என்று பொருள்.
8.    உங்கள் கனவில் தவளை வந்தால் கவலைகள் மறைந்து மனதில் நிம்மதி பிறக்கும்.
9.    தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால், உங்களுக்கு வந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் கை நழுவ போகின்றது என்று பொருள்.
10.  தேரையை கனவில் கண்டால் மிக நெருங்கிய நண்பர்கள் இறப்பார்கள் என்று பொருள்.
11.  தேரை நம் மேலே விழுவது போல கனவு வந்தால் மருத்துவ செலவு ஏற்படும்.
கனவு பலன்கள் தவளை
12.  நண்டு நம் கனவில் கண்டால் கடன் ஏற்பட்டு துன்பம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
13. நத்தையை கனவில் கண்டால் தொழில் மெது மெதுவாக பாதிப்படையும் என்று பொருள்.

இவற்றையும் படிக்கலாமே

Previous Post Next Post