-->

ஆண் மற்றும் பெண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறிய வழிகள்

குழந்தை பிறக்க சித்தர்கள் கூறிய வழிமுறைகள்

ஆசைக்கு ஒரு பொண்ணு, ஆஸ்திக்கொறு ஒரு பையன் என முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் தற்போதைய நிலையில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆணோ, பெண்ணோ கடவுள் நமக்கு கொடுக்க நினைத்தது இதுதான் என நினைத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.

ஏனெனில் எவ்வளவோ பேருக்கு இந்த குழந்தை பேறு என்ற பாக்கியம் இல்லாமல் உள்ளது. அப்படி இருக்க ஆண், பெண் என்ற பாகுபாடின்றி நம்முடைய குழந்தை என நினைத்தால் எந்த மன சங்கடமும் இருக்காது. 
ஆனால் நமக்கு ஒரு ஆண் குழந்தையாவது வேண்டுமென பலர் இன்றும் ஏங்குவதுண்டு. அதற்காக பெண்ணை வசைபாடியே பழகி விட்டது இந்த சமுகம்.

பெண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறிய வழிகள்


மருத்துவ ரீதியாக இதற்கு பல தீர்வுகள் சொல்லபட்டாலும், ஆன்மீக ரீதியாக இதற்க்கு வழி இருக்கிறதா என கேட்பவர்கள் பலர். அவர்களுக்குகான பதிவே இது. ஆண் குழந்தை வேண்டும் என நினைபவர்களுக்கு நம்முடைய முன்னோர்களும் சித்தர்களுமே சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஆண், பெண் இருவரும் உறவு கொள்ளும் போது, சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் நீங்கள் விரும்பிய குழந்தையை பெற முடியும்.

ஆணின் உடலிருந்து விந்து வெளியாகும் போது அவனது வலது நாசியில் சுவாசம் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் அதுவே இடது நாசியில் சுவாசம் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் எனவும், அப்படி இல்லாமல் இரு நாசிகளிலும் சுவாசம் வந்தால் கருவுரும் குழந்தை திருநங்கையாக பிறக்கும் என்றும் திருமூலர் திருமந்திரத்தில் கீழ்கண்ட வரிகளில் விளக்கியுள்ளார்,

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம் 482)

பெண் குழந்தை வேண்டுமெனில் உடலுறவிற்கு பின்பு பெண் தனது வலப்பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும் எனவும், அதுவே ஆண் குழந்தை பிறக்க வேண்டுமெனில் இடப்பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும் எனவும் ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

பெண் குழந்தை பெற சித்தர்கள் சொன்ன ரகசியம்

ஆண் மற்றும் பெண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறிய வழிமுறைகள்

1. இரவில் அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். அரை வயிற்றோடு படுக்கைக்கு செல்ல வேண்டும்.

2. சிறிது பால், மற்றும் 2 பழங்கள் சாப்பிட வேண்டும். உடலுறவிற்கு பின் இடது பக்கம் படுக்க வேண்டும். இரவு முழுக்க  அப்படித் தான் படுத்திருக்க வேண்டும். ஏனெனில் அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, மீண்டும் பெண்ணுடன் உறவு கொண்டால், பிறக்கபோகும் குழந்தை நிச்சயம் ஆண் குழந்தையாகத் தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள். ஆனால் சிலர் இடதுபக்கம் படுத்து சூரியக் கலையில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டாலும், பெண் குழந்தை பிறந்ததென கவலைபடுவதுண்டு. அதற்குக் இரவில் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது என்பதை முக்கியமாகும்.

3. ஆண் குழந்தை வேண்டுமெனில் பெண்னின் மாதவிடாய் முடிந்த   நாளிலிருந்து முறையே இரட்டை படை நாட்களான 6, 8, 10, 12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு கொண்டால், ஆண் குழந்தை பிறக்கும் என சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

4. பெண் குழந்தை வேண்டுவோர் பெண்களின் மாதவிடாய் முடிந்த நாளிலிருந்து முறையே ஒற்றை படை நாட்களான 7, 9, 11, 13, 15, 17, 19 ஆவது நாட்களில் உடலுறவு ஈடுபட்டால், பெண் குழந்தை பிறக்கும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

5. ஆண்கள் தங்கள் விந்துவை அதிகம் வெளியற்றக்கூடாது.  ஒரு மாத காலத்திற்கு விந்துவை வெளியேற்றாமல் தேக்கி வைத்து உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போதுதான் ஆரோக்கியமான விந்துகள் வெளிப்படும். ஆரோக்கியமான விந்துதான் ஆண் குழந்தையை உருவாக்கும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post