-->

வீட்டில் சாம்பிராணி போடுவதின் அர்த்தம் என்ன தெரியுமா?

சாம்பிராணி ஏன் போட வேண்டும்?

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. வீட்டில் சாம்பிராணி போடுவதால்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும்.

சாம்பிராணி தினமும் போட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய்,வெள்ளி போன்ற மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

வீட்டில் நிம்மதியின்மை, தூக்கமின்மை,கடன் தொல்லை,கணவன் மனைவி பிரச்சனைகள்,கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் தீர்வாகிறது சாம்பிராணி தூப பொருட்கள்.

சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும்.

ஏவல், பில்லி சூனியம்,செய்வினை, நவ கிரக தோஷம்,முன்னோர்களின் சாபம், போன்ற அனைத்தும் கஷ்டங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

வீட்டில் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடம்கடைவியாபாரம் நடக்கும் இடம், என அனைத்து இடங்களிலும் சாம்பிராணி போடுவதின் மூலம் தொழில் முன்னேற்றம் அடைந்து லாபம் அதிகரிக்கும்.

 சாம்பிராணி தூப பொருட்கள்

வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபம் போட்டு வந்தால் எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும்.

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு மருதாணி விதை அறுகம்புல் வில்வம் மற்றும் வேம்பு போன்ற பொருள்களை சாம்பிராணி நெருப்பில் தூவி தொடர்ந்து இந்த தூபத்தை போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அண்டாது.

சாம்பிராணி போடுவதால் ஏற்படும் நன்மைகள்

  1. சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
  2. சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
  3. சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
  4. சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
  5. சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..
  6. சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.
  7. சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
  8. சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
  9. சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
  10. சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
  11. சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
  12. சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
  13. சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
  14. சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
  15. சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
  16. சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.


Previous Post Next Post