-->

தாய்ப்பால் அதிகம் சுரக்க எடுத்து கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்

தாய்பாலை எவ்வாறு பெருக்குவது?

ஒரு சில பெண்கள் தாய்பால் தங்களுக்கு அதிகம் சுரக்கவில்லை என ஆதங்கபடுவார்கள். இதனால் தங்கள் குழந்தைக்கு தேவையான பாலை தங்களால் கொடுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சிக்கு அவர்கள் ஆளாவார்கள். அப்படிபட்டவர்கள் தங்கள் மகபேறு மருத்துவரை சந்தித்தால் மகபேறு மருத்துவர் ஒரு சில பால் சுரக்கும் மாத்திரைகளை கொடுப்பார். எனக்கு மாத்திரைகள் எல்லாம் வேண்டாம், இயற்கையாக பால் அதிக சுரக்க ஏதேனும் வழிகள் உண்டா என கேட்பவர்களுக்கு இந்த இயற்கை முறைகள் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும்.

பால் அதிகம் சுரக்க என்ன செய்வது

1. வெற்றிலையை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பாலானது அதிகம் சுரக்கும்.
2. கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் குடுத்தால் பால் அதிகம் சுரக்கும்.
3. வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
4. சீரகத்தை வறுத்து நன்கு பொடியாக்கி சீரகம் எவ்வளவு எடுத்தீர்களோ அதே அளவு வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
5. பூண்டை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.
6. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
7. பால் பெருக்கி என்னும் இலையை அரைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
8. கோவைக்காய் இலையை பூண்டுடன் சேர்த்து நெய்யில் வதக்கி தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

தாய்பாலை பெருக்கும் பூண்டு

9. அதிமதுர பொடியை சிறிது பாலுடன் சர்க்கரையும் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.
10. பாவக்காய் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போல போட்டு வந்தால் தாய்பால் சுரக்கும்.
11. அருகம்புல் சாற்றுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
12. அரைக்கீரை அடிகடி உணவில் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் பெருகும்.
13. அகத்தி கீரை இலையைச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
14. முருங்கை கீரையையும், பாசிபருப்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்பாலானது அதிகம் சுரக்கும்.
15. வெள்ளை பூண்டை நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி அதனுடன் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
16. சுறா மீனை புட்டு போல செய்து அதில் அதிக அளவு பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

மேற்கண்ட இந்த வழிகளில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அவற்றை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் தாய்பால் பற்றாகுறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உங்களுக்கு போதுமான அளவு பால் சுரப்பதற்க்கும் உங்கள் குழந்தையின் பசியை போக்குவதற்கும் இந்த உணவு முறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store  மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.


அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 


Previous Post Next Post