-->

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது? கருச்சிதைவு எவ்வாறெல்லாம் ஏற்படுகிறது

கருச்சிதைவு என்றால் என்ன?

கருச்சிதைவு, கர்ப்பமடையும் பெண்கள் எவரும் விரும்பாத வார்த்தை இது. ஒருவேளை கருச்சிதைவு ஏற்பட்டால் அந்த துயரத்திலிருந்து மீளவே பெண்களுக்கு சில காலம் ஆகும். போதாக்குறைக்கு உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் கேட்கும் கேள்விகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மிகுந்த துயரத்தை உண்டாக்கும்.

கர்ப்பமான பெண்களில் 20% பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. ஒரு சிலர் தங்களால் தான் கருச்சிதைவு ஏற்பட்டது என்று குற்ற உணர்ச்சியில் இருப்பார். ஒரு சிலர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றினால் தான் கருசிதைவு தங்களுக்கு ஏற்பட்டது என கருதுவர்.

1. மாடிப்படி ஏறியதால் கருச்சிதைவு
2. அதிகமாக வேலை செய்ததால் கருச்சிதைவு
3. பயணம் செய்வதால் கருச்சிதைவு
4. கீழே விழுந்ததால் கருச்சிதைவு
5. பப்பாளி, அண்ணாச்சி போன்ற பழங்களை சாப்பிட்டதால் கருச்சிதைவு
6. உடலுறவு கொண்டதால் கருச்சிதைவு

ஆனால் மேற்கொண்ட எதுவும் கருச்சிதைவுக்கு காரணம் இல்லை என்பதே உண்மை.

கருசிதைவு அறிகுறிகள்

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

கர்ப்பமடைந்து 5 மாதத்திற்குள் தானாகவே அந்த கர்ப்பம் முடிந்து விடுவதுதான் கருச்சிதைவு. பெரும்பாலான கருச்சிதைவுகள் முதல் 10 வாரத்திற்குள் ஏற்பட்டுவிடும். இது எதனால் ஏற்படுகிறது என்றால், ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. இதற்கு இயற்கைக்கு முரணான அதாவது மிக அதிகமான அல்லது மிகவும் குறைவான குரோமோசோம்களின் எண்ணிக்கையே காரணம் ஆகும்.

குரோமோசோம்களின் சீரற்ற எண்ணிக்கையால் கருவுற்ற முட்டையில் கோளாறு ஏற்படுகிறது. இவ்வாறு கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பதால் கருச்சிதைவு ஏற்படுகிறது, அப்படி உருவான கர்ப்பத்தை உடம்பானது தானாகவே அழித்து விடுவது தான் கருச்சிதைவு ஆகும்.
சில சமயங்களில் கருவானது கருப்பையில் வளராமல் பெல்லோப்பியன் டியூப் என்னும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போல கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருச்சிதைவிற்கான அறிகுறிகள் எவை?

1. பிறப்புறுப்பில் ரத்த கசிவு ஏற்படும்.
2. வயிற்றில் அதிகமான வலி ஏற்படும்
3. பிறப்புறுப்பிலிருந்து திரவம் வெளியேறுவது, பனிக்குடம் உடைவதால் இது ஏற்படுகிறது.
4.  பிறப்புறுப்பிலிருந்து ரத்தக்கட்டி வெளியேறுதல்

கருசிதைவு உண்டாக காரணங்கள்


ஒரு சில கருச்சிதைவை அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்தால் தான் அறிய முடியும்.

கருச்சிதைவடைந்த பெண்கள் எவையெல்லாம் செய்ய கூடாது?

1. கருச்சிதைவுக்கு ஆளான பெண்கள், 4 வாரங்களுக்குக் எந்த கனமான பொருளையும் தூக்கக் கூடாது.
2. கடினமான வேலைகளை செய்யாமல் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
3. உடலுறவை அறவே தவிர்க்க வேண்டும்.
4. தேகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பம் சாதரணமாக சென்றால் யாரும் எதற்கும் கவலை பட வேண்டாம். ஒருவேளை ஒரு சில அசாதாரண சுழலில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம். அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நடந்த பழைய சம்பவங்களை நினைத்து என்ன பயன். அதற்கு பதில் எதனால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டன, மறுமுறை அது நிகழாமல் எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று யோசித்தால் நாம் வருங்காலங்களில் ஜாக்கிரதையாக இருக்கலாம்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.




Previous Post Next Post