-->

தூபத்தின் வகைகளும் அதனால் உண்டாகும் பலன்களும்


இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தூபம் காட்டப்படுகிறது. வீடுகளில் தூபம் போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை சென்றுவிடும். எனவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் தூபம் போடுவார்கள்.


சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்துதூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் உண்டாகும், செல்வம் பெருகும் என்பார்கள்.

எந்த வகையான தூபம் என்ன பலன் கொடுக்கும் பின்வருவனவற்றில் விரிவாக பார்க்கலாம்.

சந்தன தூபம்
சந்தனத்தின் நறுமணதிர்க்கு நிகர் சந்தனம் மட்டுமே. இறவைனின் பூஜை பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது சந்தனம் ஆகும். அலங்கார பொருளாகவும், வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட சந்தனத்தை கொண்டு தூபம் இடுவதின் மூலம் அந்த இறைவனே இறங்கி வந்து நமக்கு அருள் புரிவார்.  

சாம்பிராணி தூபம்
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுஎன்பார்கள். தொழில் மீதும், வளர்ச்சியின் மீதும் பொறாமை கொள்ளும் பிறர் கண்களிடம் இருந்து தப்பித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய சாம்பிராணி தூபம் போட வேண்டும். சாம்பிராணி கொண்டு தூபம் போடுவதால் உண்டாகும் வாசனை கண் திரிஷ்டியை விலக செய்யும்.

ஜவ்வாது தூபம்


வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தாலும் விடா முயற்சியும் ,அதிர்ஷ்டமும் இருந்தால் எதையும் சாதித்து வாழ்க்கையில் முன்னேறி காட்ட முடியும். அந்த அதிர்ஷ்டத்தை நமக்கு அள்ளி தருவது ஜவ்வாது தூபம் ஆகும். ஜவ்வாது தூபம் போடும் போது அதில் இருந்து வரும் நறுமணம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

அகிலி தூபம்
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அது மிக பெரிய மனக்குறையாக இருக்கும். ஏன் என்றால் செல்வத்தில் மிக பெரிய செல்வம் குழந்தை செல்வமாகும். அப்பேற்பட்ட குழந்தை பாக்கியத்தை பெற அகிலி தூபம் போட வேண்டும். அகிலி தூபத்தினால் குழந்தை பேறு கிடைக்கும் பாக்கியத்தை பெற முடியும்.

துகிலி தூபம்
உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளவர்கள் அவர்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்பதிலும் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமும்,ஆயுளும் மேம்பட துகிலி தூபம் போட்டு இறைவனை வழிபட வேண்டும்.

துளசி தூபம்
திருமணத்தடை, வீடு கட்டுதல், போன்ற பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் வெற்றி அடைய துளசி தூபம் சிறந்ததாக அமையும். திருமணம் ஆகி சேர்ந்து வாழாதவர்கள், திருமணத்தடை ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் துளசி தூபம் நன்மை செய்யும்.

தூதுவளை தூபம்
தூதுவளை தூபம் போடுவதால் தெய்வ நிந்தனைகளில் இருந்து விடுபடலாம். தெய்வ சாபங்கள்,முன்னோர் சாபங்களில் இருந்து விமோச்சனம் கிடைக்கும். வீட்டில் குல தெய்வம் வாசம் செய்யும். 

வலம்புரிக்காய் தூபம்
வலம்புரிக்காய் தூபம் போடுவதால் பன்னிரண்டு வகையான பூத கணங்களையும் நீங்க செய்து வாழ்க்கையில் எல்லா வளங்களையும் கொடுக்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபம்
வீட்டில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் துர்ஷ்ட ஆவிகள் வீட்டில் இருந்து விலக வேல்லைகுங்கிலியம் தூபம் சிறந்ததாகும். இதனால் அந்த ஆவிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்.

வெண்கடுகு தூபம்
வெண்கடுகு தூபம் போடுவதால் பகைமை உணர்ச்சி குறைந்து பகைமையை மறந்து நட்புறவு ஏற்படும். அன்பும் அரவணைப்பும் உண்டாகும். .

நாய்கடுகு தூபம்
நாய்கடுகு தூபம் போடுவதால் நம்முடன் இருந்து கொண்டு நமக்கே துரோகம் செய்யும் துரோகிககள் நம்மை விட்டு விலகி செல்வர்கள். துரோகம் செய்தவர்கள் கூட நமக்கு நன்மை செய்யும் நிலை ஏற்படும்.

மருதாணிவிதை தூபம்
மாந்த்ரீகம்,செய்வினை,ஏவல்,பில்லி,சூனிய கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட மருதாணி விதை தூபம் போட வேண்டும்.  தொடர்ந்து இந்த தூபத்தினை வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் போட்டு வந்தால் எந்த தீய சக்தியும் நெருங்காது.

கரிசலாங்கன்னி தூபம் 
கரிசலாங்கண்ணி தூபம் போடுவதால் மோட்சம் அடைந்த மகன்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அத்தகைய மகான்களின் அருள் கிடைத்தால் தெரிந்தும்,தெரியலும் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் பாவ மன்னிப்பு கிடைத்து புண்ணியம் சேரும்.

வேப்பம்பட்டை தூபம்
வீட்டில் தங்கியிருக்கும் பீடையும்,தரித்திரமும் அகல வேப்பம்பட்டை தூபம் பெரிதும் உதவும். தரித்திரம் விலகி லக்ஷ்மிகடாட்சம் உண்டாகும்.

நன்னாரிவேர் தூபம்
நன்னாரிவேர் தூபம் போடுவதால் இராஜவசியம் உண்டாகும். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அன்னோன்யம் ஏற்படும், பிரிந்து இருந்தவர்கள் சேர்ந்து வாழ்வார்கள்.

வெட்டிவேர் தூபம்
எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன் வெட்டிவேர் தூபம் போட்டு ஆரம்பித்தால் தொட்ட காரியம் வெற்றி அடையும். நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும்.

வேப்பஇலைதூள் தூபம்
நீண்ட நாள் நோயால் பாதிக்கபட்டவரைகூட எழுந்து உட்கார வைப்பது வேப்பஇலைதூள் தூபம். வேப்பஇலைதூள் தூபம் போடுவதால் நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.

மருதாணிஇலைதூள் தூபம்
வாசனை மிகுந்த மருதாணிஇலைதூள் தூபம் லட்சுமிகடாட்சத்தை உண்டாக்கும். மருதாணிஇலைதூள் தூபம் போடப்படும் வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. இதனால் கடன் தொல்லை வெகுவாக குறையும்.

அருகம்புல்தூள் தூபம்

செவ்வாய் தோஷம்,ராகு கேது தோஷம்,சனி தோஷம், திருமணத் தடை போன்ற அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாக அருகம்புல்தூள் தூபம் போட வேண்டும். அருகம்புல்தூள் தூபம் போடுவதால் சர்வ தோஷங்களும் நீங்கி வாழ்க்கை சுபிட்சமாகும்.
Previous Post Next Post