-->

சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியுமா ?

சாமுத்திரிகா லட்சணம் என்றால் என்ன

ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லட்சணம் என்று பெயர். இது ஒரு பழமையான கலையாகும்.

சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்

சாமுத்திரிகா லட்சணம் பெண்களின் அங்கங்கள்

சாமுத்திரிகா லட்சணத்தின் படி ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி உடலின் எல்லா பாகங்களும் அமைவதில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். 

சாமுத்திரிகா லட்சணத்தின் படி எந்தெந்த பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பாதம்
ஒரு பெண்ணின் பாதமானது செந்தாமரைப் பூ போல சிவப்பாக இருக்க வேண்டும். கால்களில் உள்ள 5 விரல்களும் பூமியில் படும்படி இருக்க வேண்டும். 5 விரல்களும் இடைவெளி இல்லாமல் ஒன்றோடொன்று இனைந்து இருக்க வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக அமைந்திருக்க வேண்டும்.

தொடை
பெண்ணின் தொடையானது வாழைத்தண்டு போல பளபளவென இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை முடி இல்லாமல் பளிச்சென்று இருக்க வேண்டும். 

இடை
பெண்ணின் இடையானது நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் இன்னும் அழகு.

மார்பகங்கள்
பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருக்க வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும், நீண்டும் இருக்க வேண்டும். 

கைவிரல்
பெண்ணின் கைகள் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் நீண்டு அழகாக இருக்க வேண்டும். 

கழுத்து
பெண்ணின் முகமானது முழு நிலவுபோல ஒளிமிக்கதாக இருக்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு இருக்க வேண்டும். பெண்ணின் பல் வரிசையானது முத்துக்களைக் கோர்த்து வைத்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

கண்கள்
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்றும் இருக்க வேண்டும். புருவமானது வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக உள்ளதா அல்லது மஞ்சளாக உள்ளதா என்று பார்க்க  வேண்டும். உருண்டு திரண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள். வளையக்கூடிய  புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

கூந்தல்
பெண்களின் கூந்தல் நீண்டு கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் பூவின் மணம் வீச வேண்டும். ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல்  அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

வாசம்
பெண்களின் உடலில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனைதாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். 

மூக்கு
மூக்கு நீண்டு உயர்ந்து இருக்க வேண்டும். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூர்மையாக இருந்தால் அவர்கள் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. 

சாமுத்திரிகா லட்சணம் சாஸ்திரம்

நெற்றி
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக  பரந்து இருந்தால் சிறப்பு. நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது  3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

காது
காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும்  குறுகலாக இருக்கும்.
இவையெல்லாம் சாமுத்திரிகா லட்சணம் என்று நமது முன்னோர்களால் நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post