-->

இறைவனை எந்த பூவை கொண்டு அர்ச்சனை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?


அர்ச்சனை பூக்களின் பலன்கள்

நாம் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்யும் போது பலவகையான பூக்களை கொண்டு அர்ச்சனை செய்கிறோம். பூஜையில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு பூவை கொண்டு அர்ச்சனை செய்யும்போது ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த பூவை கொண்டு இறைவனை அர்ச்சனை செய்தால் எந்த வகையான பலன் கிடைக்கும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
அர்ச்சனை பூக்கள்

1. அல்லிப்பூ – வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
2. பூவரசம்பூ - உடல் ஆரோக்கியம் பலப்படும்.
3. வாடமல்லி – மனதில் இருக்கும் தேவையற்ற பயம் நீங்கி தைரியம் அதிகரிக்கும்.
4. மல்லிகைப்பூ – குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
5. செம்பருத்தி – மனதின் ஆன்ம பலம் பெருகும்.
6. காசாம்பூ – பலவித நன்மைகள் ஏற்படும்.
7. அரளிப்பூ – நீண்ட நாட்களாக இருக்கும் கடன் தொல்லை நீங்கும்.
8. சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது
9. சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
10. மனோரஞ்சிதம் – குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.
11. கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
12. நந்தியாவட்டை - குழந்தை இல்லாத குறை நீங்கும்.
13. மரிக்கொழுந்து - தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.
14. ஆவாரம் பூ – ஞாபகசக்தி அதிகரிக்கும்.
15. ரோஜா பூ – மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்
16. தாமரைப்பூ – வீட்டில் செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
17. அலரிப்பூ – குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.
18. நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம் உண்டாகும், தேக ஆரோக்கியம் மேம்படும்.
19. சம்பங்கி - உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும்.
20. அரளி பூ - பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.
21. நித்திய கல்யாணி பூ – வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
22. முல்லை பூ – செய்யும் தொழில் வளர்ச்சி, புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
எந்த பூவை கொண்டு அர்ச்சனை செய்யலாம்

23. பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும்  ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும்.
பழைய பூக்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.  


Previous Post Next Post