-->

சுண்டைக்காய் மருத்துவ நன்மைகள்



சுண்டைக்காய் நன்மைகள் 


சுண்டைக்காய் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள நன்மைகளின் பட்டியல் மிக பெரியது. சுண்டக்காயின் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், அதன் மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பானதாக மாற்றுகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.


சுண்டைக்காயில் காட்டுச் சுண்டைக்காய், நாட்டுச் சுண்டைக்காய் என இருவகை உண்டு. மலைகள் மற்றும் காடுகளில் தானாக வளர்ந்து காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக் கூடியது.
சுண்டக்காயின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள்

1. சுண்டக்காயை சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும். இதை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
2. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.
3. சுண்டைக்காயானது தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. வாயுப் பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருந்து.
4. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. வயிற்று பிரச்சனையால் அவதிபடுபவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
6. சுண்டக்காயனது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. அது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது.
7. சுண்டையானது வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பத்தோடு உடலின்  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
8. சுண்டக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. கேழ்வரகு, கீரை போன்றவற்றை விட அதிக இரும்பு சத்து கொண்டது.
9. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து காய்ச்சலை குறைப்பதுடன், உடலில் உள்ள காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.
10. சுண்டையில் உள்ள தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்கிறது.
11. சுண்டைக்காயனது நரம்பு மண்டலத்துக்கு அபரிதமான சக்தியை கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவும்.

Previous Post Next Post