-->

விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள்


விளக்கு ஏற்றுவதில் உள்ள முக்கியமான விஷயங்கள்

விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. பொதுவாக எல்லா மதங்களிலும் பூஜையின் போது விளக்கு ஏற்றபடுகிறது. எல்லா நல்ல காரியங்களிலும் விளக்கு ஏற்றுவது சுபசகுனமாக பார்க்கபடுகிறது. ஆனால், சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா? அல்லது இரட்டை விளக்கு ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

விளக்கு எவ்வாறு ஏற்ற வேண்டும்

பொதுவாகவே, நாம் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.

 
எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்


வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் விளக்கை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது மாலை வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் பிரதோஷ வேளையில் தீபம் ஏற்றுதல் சிறப்பு. அதாவது பொதுவாக 6.40 க்குள் அல்லது பஞ்சாங்கத்தில் சூரியன் அன்றைய தினம் அஸ்தமிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர் விளக்கு ஏற்றிவிட வேண்டும். அதுவே வேதாகம முறையும் கூட. 

விளக்கு முகங்களும் அவற்றின் பலன்களும்

1. ஒரு முக விளக்கு - சாந்தமான மன நிலையை தரும்.

2. இரண்டு முக விளக்கு - குடும்பத்தில் துயரங்கள் நீங்கும், செல்வம் தரும், சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

3. மூன்று முக விளக்கு - செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும், வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை பெருகும்.

4. நான்கு முக விளக்கு- சொத்து சுகங்கள் சேரும், ஆரோக்கியம் மேன்மை அடையும்.

5. ஐந்து முக விளக்கு - குறை இல்லாத நல் வாழ்க்கை தரும்.

இவை தவிர, வாரம் ஒரு முறை பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது.



விளக்கு ஏற்றுவதில் உள்ள சம்பிரதாயங்கள்


விளக்கு ஏற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. அதை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் மற்றும் பலன்கள் உண்டாகும். அவை பின்வருமாறு,

1. வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது தான் சிறப்பு.

2. தீபம் ஏற்றும் பெண் திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

3. தீபம் ஏற்றுவதற்கு முன் விளக்கை நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

4. தீபம் ஏற்றும் போது விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திற்த்து கொண்டு விளக்கு வேண்டும். இது கூடுதல் பலனைத் தரும்.

5. விளக்கை அணைக்கும்போது தீயை வாயால் ஊதி அணைக்க கூடாது. அதற்கு பதில் மலர்களை கொண்டு அணைக்கலாம். அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது. அது பாவம்.

6. கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம். இதனால் வீட்டின் அதிர்ஷ்டம் பொய் விடும். வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

7. தெற்கு திசை தவிர மற்ற எந்த திசையிலும் தீபம் ஏற்றலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.

விளக்கு திரியின் பலன்கள்

விளக்கு திரியின் பலன்கள்

1. சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்களம் பெருகும்.


2. திருமணத் தடை உள்ளவர்கள், சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் சுமை கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கு ஏற்றலாம்.

3. வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பது போல தோன்றினால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்களம் உண்டாகும்.

4. மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.

5. குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.

6. தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும்.

7. வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, பின் அந்தத் திரியில் விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.
Previous Post Next Post