-->

பிணிகளை நீக்கும் பிரிஞ்சி இலை


பிரிஞ்சி இலை

நாம் உணவில் பயன்படுத்தும் பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை பல ஆற்றல்களை கொண்டது. நம் அனைவரும் சமையலில் சேர்க்கும் பிரிஞ்சி அல்லது பிரியாணி இலை வாசம் மற்றும்  சுவைக்காக தான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் பிரியாணி இலையை உணவில் சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீர்கிறது. 

பிரியாணி இலை மருத்துவ குணங்கள்


மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை என்று கூறப்படுகிறது. பிரிஞ்சி இலைக்கு தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை என வேறு பல பெயர்களும் உள்ளது.

பிரிஞ்சி இலையில் உள்ள சத்துக்கள்

நேபாளம், பூடான் மற்றும் இமயமலைச்சாரல்களில் இந்த வகை இலைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.  இந்த இலையில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் பொழுது கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

பிரிஞ்சி இலையின் நன்மைகள்

பிரிஞ்சி இலை எண்ணெய்

பிரிஞ்சி இலையில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் கை, கால் மூட்டு வலிகளுக்கு மருந்தாக அமைகிறது. மேலும்,  தலை வலியின் போது, இந்த எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் 1 நிமிடத்தில் வலி குறைந்து விடும்.

மன அமைதி கிடைக்கும்

ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையை எடுத்து ஒரு அறையில் எரித்து வைத்து வீட்டு, 10 நிமிடம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அந்த அறையில் நுழையும் போது அங்கு ஒரு அமைதியான சூழலை உணரலாம். எரிந்த இலையின் புகையில் நேர்மறையான ஆற்றல் ஓட்டம் உருவாக்கப்படுவதால் மன அமைதியை அது தருவதாக கூறப்படுகிறது.

உணவு செரிமானமாகும்

பெருங்குடலிலும், வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த இலை மருந்தாக செயல்படுகிறது. இதிலுள்ள 'என்சைம்ஸ்' எனும் புரதப்பொருள், உணவு விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

பிரியாணி இலைகள் உடலின் உள்ள இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளுவது மிகுந்த நன்மை பயக்கும். இதிலுள்ள 'லினலூல்எனும் இரசாயனம் மன அழுத்தத்தை குறைக்கவும், எதிர்க்கவும் உதவுகிறது.

புற்றுநோயில் இருந்து காக்கிறது

பிரிஞ்சி இலையில் 'காஃபிக்' என்கிற அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது

இந்த இலைகளில் உள்ள 'காஃபிக்' என்ற அமிலமும், 'ரூடின்' என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவடைய செய்கிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படும்

பிரியாணி இலையை நீரில் இட்டு காய்ச்சிய நீரை தினமும் ஒரு டம்ளர் பருகினால், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க உதவி புரிகிறது. இந்நீரை குடிப்பதால் பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமலும் தடுப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூக்கத்திற்கு உதவும் பிரியாணி இலை

தூக்கமின்மையால் அவதிப்படுபபவர்கள் தினமும் இரவில் பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வரும்.

பிரியாணி இலை மருத்துவ பண்புகள்

 பலவித நோய்களை நீக்குகிறது

மன அழுத்தமும், பதற்றமும் நாளுக்கு நாள் மனிதர்களுக்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையை எரித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால் 5 நிமிடத்தில் மன அமைதியும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலையும் பெறலாம். மேலும் வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜுரம், சுவாசகாசம், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை மிகப்பெரிய தீர்வாக செயல்படுகிறது.

பிரிஞ்சி இலை பயன்பாடு

பிரிஞ்சி இலையானது கறிவகைகள், கேக்குகள், இனிப்புகள், பானங்கள், ரொட்டிகள் ஆகியவற்றில் நறுமணமூட்ட பயன்படுகிறது. பசியைத் தூண்டவும், சீரணக் கோளாறுகளை சரி செய்யவும், சிறு நீரக கோளாறுகளை சரி செய்யவும் பயன்படுகிறது. ஊறுகாய், சாஸ் போன்றவற்றை தாளிக்கவும், மணமூட்டவும் பயன்படுகிறது. இனிப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.
Previous Post Next Post