-->

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்


பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்ம தேவரை குறிப்பதாகும். பிரம்ம முகூர்த்தம் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்ய தொடங்கும் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் தடையின்றி நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பின் அந்நாளில் செய்ய வேண்டிய நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.

இதனால் தான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேச நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்து தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பிரம்ம முகூர்த்த வழிபாடு

பிரம்ம முகூர்த்ததில் எவ்வாறு வழிபட வேண்டுமென்றால் பெண்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து நெற்றியில் திலகமிட வேண்டும். பின் வீட்டினையும், பூஜை அறையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் மாகோலமிட்டு விளக்கை ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். நம் வேண்டுதலை மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். 


பிரம்ம முகூர்த்த வழிபாட்டின் பலன்கள்

பிரம்ம முகூர்த்தத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது பலமடங்கு புன்ணியத்தை நமக்கு தேடித் தரும். இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதை காட்டிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பல்வேறு பலன்களை அள்ளித் தரும். 

தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் வெற்றி பெரும்.


இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷ பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்து வைத்தால் தோஷ நிவர்த்தி அடைந்து அவர்களின் வாழ்க்கையும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், தேவதைகள், திருமால், சிவபெருமான், மாகலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் நமக்கு வான்வெளியில்  அருள்பாலிப்பதாக ஐய்தீகம். இந்நேரத்தில் தெய்வங்களின் பார்வை நம் மீது படும் பொழுது நம் துன்பங்கள் அனைத்தும் மறைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெரும்.


Previous Post Next Post