-->

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு


விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு

சந்தோஷ் நாராயணன்
அட்டகத்திபடத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘மெட்ராஸ்’, ‘36 வயதினிலே’, ‘இறுதிச்சுற்று’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘மெர்க்குரிஉள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

காலா
அவர் இசையமைப்பில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த காலாபடம் ரிலீஸாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், அருள்தாஸ், சாக்‌ஷி அகர்வால், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

கிரிக்கெட் பேட்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நேற்று பிறந்த நாள். எனவே, நேற்று காலையிலேயே தன் மனைவியுடன் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சந்தோஷ் நாராயணனுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் விஜய்.

அதில், ‘சனா (சந்தோஷ் நாராயணனின் செல்ல பெயர்), ‘ஹேப்பி பர்த்டே நண்பாஎன பிரிண்ட் செய்து, ‘பிரியமுடன் விஜய்கையெழுத்திட்ட பேட்-டை அவருக்கு பரிசளித்துள்ளர் இளைய தளபதி விஜய்.

நன்றி

இந்த பேட்-டை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். விஜய் சாரிடம் இருந்து எனக்கு மிகச்சிறப்பான ஆச்சரியப் பரிசு கிடைத்திருக்கிறது. ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பேட்டில், உங்கள் கையெழுத்து போட்டு தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கு மிகச்சிறப்பான தருணம். நன்றி அண்ணாஎன ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
Previous Post Next Post