-->

பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நான் தயார் - நடிகை பரபரப்பு பேட்டி

நிகிஷா படேல் பிரபுதேவா

நிகிஷா பட்டேல்
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் ஹீரோயனாக நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டிமுனி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

பாண்டிமுனி
அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகிஷா பட்டேல் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் போது தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படத்தில் நடிக்கிறேன்.

திருமணம் செய்து கொள்ள தயார்
ஹீரோக்களில் பெரும்பாலானோரை எனக்கு பிடிக்கும். குறிப்பாக நடிகர், மற்றும் இயக்குனரான பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவர் குடும்பமும், எங்களின் குடும்பமும் நட்பாக பழகி வருகிறோம். பலர் அவருடன் நடிப்பீர்களா? என என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், அவரை நான் திருமணம் செய்து கொள்ளவே தயாராக இருக்கிறேன்என கூறி அதிர வைத்தார்.

விவாகரத்து
பிரபுதேவா ரம்லத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் அவரின் மூத்தமகன் 2008ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். பின்பு தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

நயன்தாரா
பின்பு பிரபுதேவாவும், நயன்தாராவும் இருவரும் நெருக்கமாக பழகினர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதோ காரணத்தால் நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் திடீரென்று பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் என்று நிகிஷா பட்டேல் கூறி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post