-->

உடல் உஷ்ணதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

மருத்துவ குனமிகுந்த நல்லெண்ணெய்
இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தாலும்,நம் உணவு பழக்கவழக்க மாற்றத்தாலும் நமது உடலில் அதிக அளவில் வெப்பம் உண்டகிறது, நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது. 

இவ்வாறு உடல் வெப்பம் அடைவதற்கு காரணம்,நாம் நமது வேலை காரணமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும்,நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பதினாலும் ஏற்படுகிறது

இதனால் நம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உஷ்ணம் அதிகரித்து நம் உடல் பல்வேறு வகையான உபாதைகளுக்கு ஆளாகிறது. இதனால் நமக்கு முடி உதிர்வு,தோல் வியாதிகள்,குடல் இறக்கம்,வயிற்றுப்புண்,பாத வெடிப்பு,உடல் சூட்டினால் ஏற்படும் கட்டிகள் போன்ற பல்வேறு அவஸ்தைகளுக்கு ஆளாகிறோம்.

இவற்றை தவிர்க்க ஒரே வழி நம் உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதே ஆகும்.

எப்படி நம் உடல் சூட்டை தணிப்பது என்பதை காண்போம் வாருங்கள்.

தேவையான பொருள்கள் :

1.நல்லெண்ணெய் 
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

1. நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

2.  சூடு ஆறியவுடன் எண்ணையை இரண்டு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் தடவி விட வேண்டும்.

3. இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனால் உங்கள் உடம்பு உஷ்ணம் குறைந்து மெது மெதுவாக குளிர்ச்சி அடைவதை உங்களால் உணர முடியும். 

4. இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி காய்ச்சல் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

5. இதனை தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு முன் இம்முறையை பின் பற்றினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.


Previous Post Next Post