-->

நடிகர் விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் கூட்டு வைத்துள்ளார் - பரபரப்பு குற்றச்சாட்டு


தமிழ் ராக்கர்ஸ் மற்றும் விஷால்

தமிழ் ராக்கர்ஸ்

புதுப்படங்கள் ரிலீஸான அன்றே இணையத்தளத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ் ராக்கர்ஸ். அவ்வப்போது ஒரு சில அட்மின்கள் பிடிபட்டாலும் தமிழ் ராக்கர்ஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
தமிழ் திரையுலகத்திற்கு பெரும் சவாலாக மாறிவிட்ட தமிழ் ராக்கர்ஸை கூண்டோடு ஒழிக்காமல் விட மாட்டேன் என்று தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் விஷால் சவால் விட்டுருந்தார்.

குற்றச்சாட்டு

ஆனால் விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் டீல் பேசியுள்ளதாக சக தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். விஷால் தமிழ் ராக்கர்ஸுடன் ரகசிய உடன்படிக்கை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராதாரவி

நடிகர் ராதாரவி கூறுகையில் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை கண்டுபிடித்திருந்தால் அதை விஷால் ஏன் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அந்த தகவலை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குறுதி

விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். வாக்குறுதி தவறிய அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து உடனே விலக வேண்டும். ஒரு தமிழன் தான் தலைவராக வேண்டும் என்கிறார் ராதாரவி.

பாரதிராஜா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரம் தமிழர்கள் கைக்கு வர வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இதே கருத்தை டி. ராஜேந்தரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷாலுக்கு எதிராக தமிழ் திரையுலக மூத்த உறுபினர்கள் பாரதிராஜா, ராதாரவி, டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருப்பது விஷால் தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Previous Post Next Post