-->

உளுத்தங்கஞ்சி செய்வது எப்படி - Uluththankanji


தேவையான பொருட்கள்
  1. உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
  2. பனை வெல்லம் - 1/2 கிலோ
  3. ஏலக்காய் - 10
  4. தேங்காய் - 1
  5. சுக்கு - 1/2 அங்குல நீளம்
செய்முறை
  1. உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர் அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
  4. உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  5. கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்.
  6. சுக்கையும்,ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
  7. கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
  9. 5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும்.





Previous Post Next Post