-->

கனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்

கனவுகள்

நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலனுண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன.


கனவுகளின் பலன்கள்

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் காணும் கனவு ஒரு வருட காலத்திலும்,  இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் காணும் கனவு 3 மாதங்களிலும், இரவு10.48  மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்கு காணும் கனவு 1 மாத காலத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு இடைப்பட்ட காலத்தில்  காணும் கனவு 10 நாள்களிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் காணும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகல் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம். 

எப்படிப்பட்ட கனவுகள்

நாம் காணும் எல்லா கனவுகளும் பலிப்பதில்லை. மாறாக சில கனவுகள் வந்து மறைந்து விடும். சில கனவுகளை நம்மால் நினைவில் கொள்ள இயலாது. உடனடியாக மறந்துவிடும். சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி விடும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அமானுஷ்யங்கள் என பலவகையான கனவுகள் நமக்கு வந்து போகின்றன. அந்த கனவின் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அவர்களுக்கு தங்கள் கனவின் பயன் தெரியும் வகையில் அதில் சிலவற்றை இங்கு நாங்கள் தொகுத்துள்ளோம்.

இவற்றையும் படிக்கலாமே




Previous Post Next Post