-->

கனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால்


ஊர்வன கனவில் வந்தால்


1.    எறும்பு ஊர்வதை போல கனவு வந்தால் பதவி உயர்வு ஏற்படும் என்று பொருள்.
2.    எறும்புகள் கூட்டமாக சென்றால் தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்று பொருள்.
3.    எறும்புகள் சர்க்கரையை சாப்பிடுவது போலவே அல்லது உணவை தூக்கிகொண்டு செல்வதை போலவோ கனவு கண்டால் நீங்கள் சேமித்து வைத்த பொருள் சிறிது சிறிதாக கரையும் என்று பொருள்.
4.    பல்லி ஊர்ந்து செல்வது போல கனவு வந்தால் தொழில் உயர்வு ஏற்படும்.
கனவு பலன்கள் பல்லி

5.    இரண்டு பல்லிகள் இணைவது போல கனவு கண்டால் வீட்டில் நல்லது நடக்கும்.
6.    பல்லிகள் சண்டை போடுவது போல கனவு வந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.
7.    தேள் கனவில் வந்தால் ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று பொருள்.
8.    உங்களை தேள் கொட்டி விட்டது போல கனவு வந்தால் எடுத்து கொண்ட காரியத்தில் காரிய சித்தி ஏற்படும்.
தேள் கனவு பலன்கள்
9.    பாம்பு வேகமாக செல்வது போல் கனவு வந்தால் நன்மை உண்டாக போகிறது என்று பொருள்.
10.  பல்லி உங்கள் கனவில் வந்தால் நீங்கள் வகிக்கும் பதவிக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
11.  பாம்பு படம் எடுப்பது போல கனவு வந்தால் பொருள் விரயம் ஏற்படும்.
12.  பாம்பு புற்றை கனவில் கண்டால் உங்களுக்கு இன்பம் உண்டாகும்.
13.  பாம்பு உங்கள் உடலின் மேல் ஏறி செல்வது போல கனவு வந்தால், உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக விலகும்.
14.  சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள்.
15.  நல்ல பாம்பை கனவில் கண்டால் எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
16.  நல்ல பாம்பை கொல்வது போல கனவு வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
நல்ல பாம்பு கனவு பலன்கள்
17.  நல்ல பாம்பை நீங்கள் துரத்துவதாக கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
18.  அதுவே நல்ல பாம்பு உங்களை துரத்துவது போல கனவு கண்டால் பெரிய துன்பம் வரும்.
19.ஒரே ஒரு நல்ல பாம்பைக் கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லைகள் ஏற்படும் என்று பொருள்.
20.கனவில் இரண்டு பாம்புகளை ஒரே நேரத்தில் கண்டால் நன்மை உண்டாக போகிறது என்று அர்த்தம்.
21.நீங்கள் பாம்பை கொல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு விரோதிகளால் இதுவரை ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் என்று பொருள்.
22.உங்களை பாம்பு கடித்து விட்டது போல கனவு கண்டால் தனலாபம் ஏற்படும்.
23.உங்களின் காலை சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் உங்களை சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
24.உங்களை பாம்பு கடித்து ரத்தம் வருவது கனவு கண்டால் உங்களை பிடித்த சனி விலகிவிட்டது என்று அர்த்தம்.

25.உங்கள் கழுத்தில் பாம்பு மாலை போல விழுவதாக கனவு கண்டால் செல்வந்தர் ஆக போகிறீர்கள் என்று அர்த்தம்.

இவற்றையும் படிக்கலாமே


Previous Post Next Post