-->

கெட்ட கனவுகளும் அதற்கான பரிகார முறைகளும்

கெட்ட கனவுகளுக்கான பரிகாரங்கள்

கெட்ட கனவுகளும் அதற்கான பரிகாரங்களும்

மனிதனின் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில நேரங்களில் சில கெட்ட கனவுகள் வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்தும், அது பலிக்குமா அல்லது பலிக்கிறதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். எந்த மாதிரியான கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வரும் பத்திகளில் தொகுத்து உள்ளோம், 
  1. பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் நம் கனவில் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துகள் சம்பந்தமான கனவுகள் வராது.
  2. நோய், வியாதி சம்பந்தமான கனவுகள் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபாட்டு வர வேண்டும். இதற்க்கு ஆஞ்சநேயர் வழிபாடும் செய்வதும் நல்லது.
  3. பேய், பிசாசு மற்றும் நம் காரியங்கள் தடைபடுவது போல கனவு கண்டால் பிள்ளையாரை வழிபடவேண்டும். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலையும் படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.
  4. பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
  5. படிப்பு தடைப்படும்படியான கனவுகளை கண்டால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை வழிபாட்டு வரலாம்.
  6. குறிப்பிட்ட தெய்வம் நமது கனவில் அடிக்கடி வந்தால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாட்டு வர நம்மை பிடித்த சகல கஷ்டங்களும் விலகும்.
  7. இறந்தவர்கள் அடிகடி நமது கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். சாமிக்கு பொங்கல் வைத்தும் இறந்த நம் முன்னோர்க்கு திதி கொடுத்தும் வழிபட வேண்டும்.


பொதுவாக கெட்ட கனவுகள் கண்டால் காலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாளை (அல்லது இஷ்ட தெய்வம்) மனதில் நினைத்து தொழ வேண்டும். இவ்வாறு தொழுவதால் நமது மனம் தெளிவடையும். மேலும் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது.

காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்என சொல்லி பெருமாளை வணங்க வேண்டும்.
Previous Post Next Post