-->

சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா ? கெட்டதா ?


தேங்காய் அழுகி இருப்பது நல்லதா கெட்டதா

கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் 

இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்கும் ஒன்றுதான் கோவிலில் தேங்காய் உடைப்பது.நாம் உடைக்கும் தேங்காய் எப்படி சுத்தமாக இருக்கிறதோ அது போன்று நம் மனமும் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும். 
  
பகவானால் படைக்கப்பட்ட,பகவானுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய முக்கியப் பொருள் தேங்காய். தேங்காயில் மூன்று கண்கள் உள்ளன. 
ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும்,இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாக போற்றப்படுகிறது.

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.
அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

நம்மில் பல பேர் கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் உடனே கெட்ட சகுனம்,அபசகுனம் என்று நினைத்து பெரும் குழப்பத்திற்கு ஆளாவர்கள்.

ஆனால் தேங்காய் அழுகி இருந்தால் நல்லது என்றும் கூறுகிறார்கள்.அவ்வாறு இருந்தால் தீய சக்திகள்,தரித்திரம்,கண்திருஷ்டி போன்றவை விலகிவிடும் என்று சொல்கிறார்கள்

தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?
நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்
.
தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?
நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

Previous Post Next Post