-->

கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரவசம் ஆக வேண்டுமா அப்போ இத சாப்பிடுங்க




உளுந்தங்களி  சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


உளுந்தங்களியை வாரமொருமுறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெற்று  எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும்.கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சுகபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். 

தேவையான பொருட்கள் 
  1. உடைத்த உளுந்து – 1 கப்
  2. பச்சரிசி – 1 கைப்பிடி
  3. கருப்பட்டி அல்லது பனை வெல்லம்– 1 1/2  கப் 
  4. நல்லெண்ணெய் – தேவையான அளவு 
  5. தண்ணீர் – 4 கப்
செய்முறை

  1. முதலில் உளுந்தை சுத்தம் செய்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதே போன்று பச்சரிசியையும் கல் நீக்கி சுத்தம் செய்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின் வறுத்த உளுந்தையும்,பச்சரிசியையும் நன்கு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  4. கருப்பட்டியை நைத்து  தண்ணீர் ஊற்றி  கரைத்து அடுப்பில் ஏற்றி சூடாக்கி வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  5. வடிகட்டிய வெல்லக் கரைசலில்  உளுந்து, அரிசி மாவைப் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்துக்  கிளறவும்.
  6. நன்கு சுருண்டு வரும்போது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
  7. எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறினால் சத்தான உளுந்தங்களி ரெடி.
Previous Post Next Post