-->

இரத்தசோகையை கட்டுபடுத்தும் இஞ்சி அல்வா செய்வது எப்படி

ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி அல்வா

இஞ்சி அல்வா

இஞ்சியை ரத்தசோகையைக் கட்டுப்படுத்தவும்,நாம் உண்ணும் உணவை செரிமானம் அடைய செய்வதற்கும் உதவுகிறது .

தேவையான பொருட்கள்
  1.  இஞ்சி - 100 கிராம்
  2.  பனை வெல்லம் - 2 கப்
  3.  விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 10
  4.  ஏலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்
  5.  நெய் - 2 டீஸ்பூன்
  6.  கசகசா - 2 டீஸ்பூன்
  7. முந்திரி - 10
  8. காய்ந்த திராட்சை - 10
  9. கேசரி கலர் - 1 சிட்டிகை 

செய்முறை
  1. இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும். வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும்.
  3. கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும்.
  4. பின் ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் நெய்விட்டுக் கிளறவும்.
  5. அடுப்பை ‘ஸிம்மில் வைத்து, தொடர்ந்து கிளரி அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான சத்தான இஞ்சி அல்வா ரெடி.

.


Previous Post Next Post