-->

நினைத்த காரியம் வெற்றி அடைய வணங்க வேண்டிய தெய்வங்கள்

 நினைத்த காரியம் எளிதில் நிறைவேற எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியுமா?



நினைத்த காரியம் வெற்றி பெற

தடைகள் நீங்க - விநாயகரை வணங்க தடைகள் விலகி நன்மை நடக்கும்.
செல்வ செழிப்பு அதிகரிக்க - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வணங்க வேண்டும். 
நோய் தீர்ந்து ஆரோக்கியம் பெற - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
வீடு,நிலம்,சொத்து சேர - செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.
நீண்ட ஆயுளை பெற  - ருத்திரனை வணங்க வேண்டும்.
மனவலிமை,உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வணங்க வேண்டும்.
கல்வி,கலைத்துறையில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
திருமணம் தடையின்றி நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனை வணங்க வேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீங்க  -  மங்கள கௌரியை வணங்கவேண்டும்.
குழந்தை செல்வம் பெற  - சந்தான லெட்சுமியும், சந்தான கிருஷ்ணனையும் வணங்க  வேண்டும்.சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும்.
தொழில் முன்னேற்றம் மற்றும் லாபம் பெற  - திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
புதிய தொழில் துவங்க - ஸ்ரீ கஜலட்சுமியை வணங்க வேண்டும். 
விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி வணங்கவேண்டும்.
உணவு கஷ்டம் நீங்க -  ஸ்ரீ அன்னபூரணியை வணங்க வேண்டும் 
வழக்குகளில் வெற்றி பெற  - விநாயகரை வணங்க வேண்டும்
சனி தோஷம் நீங்க -  ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் வணங்க வேண்டும்.
பகைவர் தொல்லை நீங்க -  திருச்செந்தூர் முருகனுக்கு சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.
பில்லி,சூனியம்,செய்வினை நீங்க -  ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மரை வணங்க வேண்டும்.
திருஷ்டி விலக - முத்துமாரி அம்மனை வணங்க வேண்டும்.
பாவம் நீங்கி மோட்சம் பெற – பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட வேண்டும்.
இவை அனைத்தையும் பின்பற்றி வந்தால் நம் வாழ்க்கையில் பாவம் நீங்கி சகல செல்வங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும்.


Previous Post Next Post