-->

கருத்தடை என்றால் என்ன? கருத்தடை முறைகள் என்னென்ன?

கருத்தடை என்றால் என்ன?

கருத்தடை என்பது கர்ப்பத்தை தடை செய்யும் நிகழ்வை குறிப்பதாகும். விந்தணுவானது கருமுட்டையுடன் சேர்ந்து வளருவதை கரு என்கிறோம். இந்த கரு உருவாவதை தடுப்பதே கருத்தடை முறையாகும். கர்ப்பமாகாமல் தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கருத்தடையில் சில நல்ல விஷயங்களும் சில கெட்ட விஷயங்களும் உள்ளன. இவற்றில் சில தற்காலிக முறைகளும், சில நிரந்திர முறைகளும் அடங்கியுள்ளன.

கருத்தடை சாதனங்கள்

கருத்தடை ஏன் அவசியம்?

பொதுவாக கருத்தடை மூன்று முக்கிய விஷயங்களுக்காக செய்யப்படுகிறது.

1. திருமணமான இளம் தம்பதிகள் சில காலம் சந்தோஷமாக வாழ்வதற்காக குழந்தை பிறப்பை தள்ளி போடுவதற்காக கருத்தடை முறைகளை பின்பற்றுகிறார்கள்.
2. இன்னும் சில தம்பதிகள் பொருளாதரத்தில் நல்ல நிலையை அடையும் வரை குழந்தை வேண்டாம் என முடிவு செய்து கருத்தடை முறைகளை பின்பற்றுகிறார்கள்.
3. மூன்றாம் வகையானது தங்களுக்கு இருக்கும் குழந்தையே போதும் மேற்கொண்டு குழந்தைகள் வேண்டாம் என கருத்தடை செய்து கொள்கிறார்கள்.

கருத்தடை முறைகள் எவ்வாறு கர்ப்பத்தை தடுக்கின்றன?

1. ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடையாமல் தடுக்கும்
2. ஆணின் விந்தணுவை முழுவதுமாக அழித்துவிடும்.
3. கருமுட்டையே உருவாகாமல் தடுக்கும்.
4.  ஆணின் விந்தணுவை உள்ளே போகவிடாமல் தடுக்கும்.

கருத்தடை முறைகள்

1. குறிப்பிட்ட நாட்களில் உடலுறவை தவிர்ப்பது. 

கருமுட்டை வளரும் காலத்தில் ஆண் மற்றும் பெண் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணிற்கு சராசரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும். இந்த சுழற்சி பெண்ணிற்கு பெண் மாறுபடலாம். இந்த மாதவிடாயின் முதல் 7 நாளும், கடைசி 7 நாளும் தான் பாதுகாப்பான நாளாகும். இந்நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கும். ஆனால் நாள் கணக்கில் தவறுகள் ஏற்பட்டால் இந்த முயற்சி தோல்வியிலேயே முடியும்.

2. ஆணுறை உபயோகிப்பது

ஆணுறை என்பது ரப்பர் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். உடலுறவிற்கு முன்பு ஆண்கள் ஆணுறையை அணிந்து கொள்வதன் மூலம், பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க முடியும். அணுறையானது சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் எய்டஸ் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம். இது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் உபயோகபடுத்தபடுகிறது.

ஆணுறை ஏன் உபயோகிக்க வேண்டும்


இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இதை ஒரு முறை உபயோகித்தால் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. மேலும் பயன்படுத்தும்போது இது சேதம் அடையவோ, கிழிந்து விடவோ கூட வாய்ப்புள்ளது. எனவே தரமான ஆணுறைகளை வாங்கி உபயோகபடுத்தலாம்.

3. கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரையின் பயன்கள்

கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரெஜெஸ்ட்டிரான் போன்ற மாத்திரைகள் உடலின் ஹார்மோன்களை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டவை. இந்த மாத்திரைகள் பெண்ணின் உடலிலிருந்து சினை முட்டை வெளியேறாமல் தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் ஆணின் விந்தணுவை கர்ப்பபையில் உள்ளே நுழைய விடாமல் செய்யும். இதனால் கரு உருவாவது தடுக்கப்படும்.

4. ஸ்பெர்மிசைடு

ஸ்பெர்மிசைடு என்பது ஆணின் விந்தணுவை பெண்ணின் சினை முட்டையை நெருங்க விடாமல் அழிக்க கூடியதாகும். இதை பெண்ணுறுப்பில் பொருத்தி கொள்ள வேண்டும். இது ஆணின் விந்தணுவை செயல்படாமல் செய்வதால் கருத்தரிப்பை தடுக்கிறது. இந்த ஸ்பெர்மிசைடு நுரை, பஞ்சு, ஜெல்லி, மாத்திரை, மற்றும் கீரீம் வடிவத்தில் கிடைக்கிறது. இது ஒரு சிறப்பான கருத்தடை முறையாகும். ஒரு சிலருக்கு இது ஒத்துகொள்ளாமல் அலர்ஜி போன்ற விளைவுகள் ஏற்படும்.

5. காப்பர் – டி

எதற்காக காப்பர் டி

காப்பர் – டி என்னும் சாதனம் கர்ப்பப்பையின் வாயில் பொருத்தபடுகிறது. இந்த சாதனம் சினைமுட்டையை கருத்தரிக்க முடியாமல் செய்து விடும். இந்த காப்பர் – டி சாதனம் மிக சிறந்த பலன் அளிக்க கூடியவை, மேலும் மிக பாதுகாப்பானவை. இந்த சாதனமானது எப்பொழுதும் கர்ப்பபைக்குள் மிக சிறிய அளவில் செம்பை வேல்யேற்றி கொண்டே இருக்கும். இந்த செம்பானது கர்ப்பபையிலும், கருக்குழாயிலும் சில வேதியல் மாற்றங்கள் செய்து சினை முட்டையை கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகிறது. இதை குறைந்தது 5 ஆண்டுகள் உபயோகிக்கலாம். இதை ஒரு குழந்தை பெற்ற பின்பு அடுத்த குழந்தைக்கு சில காலம் இடைவெளி விடுபவர்கள் பெரும்பாலும் செய்து கொள்கிறார்கள்.

6. குடும்ப கட்டுப்பாடு

குடும்ப கட்டுப்பாடு திட்டம்

இது ஒரு நிரந்திரமான முறையாகும். இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் அடைப்பது, அல்லது வெட்டி எடுக்கபடுகிறது. ஆணின் விந்தணுவை மற்றும் பெண்ணின் சினை முட்டைகளை எடுத்துசெல்லும் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் அடைத்து விடுவதுதான் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மீண்டும் குழந்தை பிறக்காது. ஒருவேளை இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு மனம் மாறி மீண்டும் குழந்தை பெற்று கொள்ள விரும்பினால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் மீண்டும் கருத்தரிப்பது என்பது அரிதாகும்.

7. வாசக்கடமி

வாசக்கடமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சையைச் செய்வதால் விந்தணுக்களை எடுத்து செல்லும் குழாய்கள் அடைக்படுகின்றன. இதன் மூலம் விந்தணு கருப்பை உள்ளே செல்வது கட்டுபடுத்தபடுவதால் கருத்தரிப்பதைத் தடுக்கலாம்.

மேற்கண்ட இந்த முறைகளை பின்பற்றினால் கருத்தரிப்பு நிகழாமல் தடுக்கலாம்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  
Previous Post Next Post