-->

ஒரு மாதம் காபி, டீ குடிக்காம இருந்தா என்ன ஆகும்னு தெரியுமா?


காபி, டீ குடிக்காமல் இருப்பதால் நடக்கும் நன்மைகள் 


நாம் தினசரி காலை பொழுதை தொடங்குவது காபி அல்லது டீயைக் குடித்து தான். மாலையில் ஒரு முறை காபி, டீ குடிப்போம். விருந்தினர் யாரவது வந்தால் உடனே கொடுப்பது காபி, டீ, ஜூஸ் தான். இப்படி உணவு உண்ணும் போது தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நாம் ஏதாவது ஒன்றை குடித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

காபி,டீ தீமைகள்

உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தி இல்லாமல், சோர்வடைந்து விடும். உடலில் தண்ணீர் பற்றாகுறை காரணமாகவே உடல் சோர்வு ஏற்படுகிறது.
நமது சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். 

தண்ணீர் இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி ஏற்படுத்தி விடும்.
இவ்வாறு காபிடீஜூஸ் போன்ற பானங்களை குடிப்பதை விட இந்த நேரங்களில் தண்ணீர் குடிப்பது சிறந்ததாகும்.

ஒரு மாதம் காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, அந்த நேரத்தில்  தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தண்ணீர் குடிப்பதால் உடலினுள் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை பார்க்கலாம்.


தண்ணீர் குடிப்பதன் அவசியம்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 
தண்ணீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

கொழுப்பு குறையும்
ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒருவர் குளிர் பானங்கள், காபி, டீ அல்லது இதர பானங்களின் மூலம் 300-500 கலோரிகளை எடுப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால், கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடை குறைவதைக் காணலாம்.

மூட்டு வலி நீங்க 
உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் மூட்டுகளுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆகவே உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.

ஆரோக்கியமான இதயம்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நிபுணர்களும், தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறைவதாக சொல்கின்றனர்.

ஆற்றல் நிலையாக இருக்கும்
சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் போன்றவற்றைக் குடிக்கும் போது, உடலின் ஆற்றல் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரித்து, வேகமாக குறையும். ஆனால் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு சீராகி, உடலின் ஆற்றல் நிலையாக இருக்கும்.

முதுமை தடுக்கப்படும்
தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, காபி, டீ, ஆல்கஹாலுக்கு 'நோ' சொல்லி இருந்து பாருங்கள். உங்கள் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.

எடை குறையும்
தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படுவதால், உடல் எடையில் சிறிது மாற்றத்தைக் காண முடியும். அதிலும் உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.

Previous Post Next Post