-->

உணவு சாப்பிட்டவுடன் செய்ய கூடாதவை


சாப்பிட்டவுடன் செய்யகூடாதவை

உணவு சாப்பிட்டவுடன் சிலர் செய்யும் தவறான காரியங்களால் சாப்பிட்ட உணவானது சரியாக செரிமானம் ஆகாமல் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இதற்க்கு நாம் மேற்கொள்ளும் ஒரு சில தவறான பழக்க வழக்கங்கள் தான் காரணம். அந்த வகையில் எந்தெந்த விஷயங்களை எல்லாம் சாப்பிட்டவுடன் செய்யகூடாது என்பதை பார்ப்போம்.


சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது

தினமும் காலையில் வெந்நீரில் குளித்த உடன்  சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் ஒரு சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே அடிப்படையில் தவறானவை.
உணவானது சாப்பிட்டவுடன் செரிமானம் ஆக, ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல  வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான  உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தமானது சரும பகுதிக்கு சென்றுவிடும். இதனால் உணவு செரிமானம் ஆகாமல் போகலாம்.

அதே போல சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டமானது கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால்வயிற்று பகுதிக்குச்  செல்லும் ரத்த ஓட்டமானது குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டு விட்டு 2 மணிநேரம் கழித்துக் குளிக்கலாம். அப்போது தான் நாம் சாப்பிட்ட உணவானது சரியாக செரிமானம் ஆகும். இல்லையேல் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். 


உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது 

அதே போல உணவு சாபிட்டவுடனே பழங்களை சாப்பிடகூடாது. ஏனெனில் பழங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

தேநீர் குடிக்கக் கூடாது 

சாப்பிட்டவுடன் டீ குடிக்க கூடாது. ஏனெனில் டீயில் அதிகபடியான அளவு அமிலங்கள் உள்ளது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து  உணவு செரிமானம் ஆவதை சிக்கலானதாக மாற்றிவிடும். 


புகை பிடிக்கக் கூடாது 

உணவு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட்டானது, ஏறகுறைய  10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. 


பெல்ட்டை தளர்த்தக் கூடாது 

சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என்று பலர் இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவானது உடனடியாக குடலுக்கு சென்று விடுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.


சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது மிக தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் சரியான சத்துகள் நம் உடலுக்கு கிடைக்காது. 


சாப்பிட்டதும் தூங்கக் கூடாது 

சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க் கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Previous Post Next Post