-->

கடவுளை வீட்டிலேயே வழிபடாமல் ஏன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது ஏன் தெரியுமா? 


  • கோவில் பொதுவாக பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் அமைக்கப்பட்டிருக்கும். காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடத்தில் நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும்.
  • கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் கோவிலின் மைய பகுதியில் வீற்றிருக்கும்.
    கோவில் கோபுரம்

  • இந்த இடம்தான் அந்த பகுதியின் சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் நேர்மறை சக்தி அதிகம் உண்டாகும் இடமாக இருக்கும்.
  • கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும், அந்த செப்பு தகடு தான் ஆற்றலை அதிகமாக்கும்.
  • மூலஸ்தானத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டு ஒரு வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும். இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது அந்த ஆற்றலை விரயம் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் மனிதர்களுக்கு இந்த ஆற்றல் கிடைக்க முன்னோர்களால் செய்யப்பட்ட ஏற்பாடாகும்.
  • கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் ஆற்றலின் சுற்று பாதை இது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே ஆற்றலின் சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த ஆற்றலானது அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
  • இந்த ஆற்றலானது நமது உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி ஆகும்.
  • அதே போல கோவிலின் மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த தெய்வ விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
  • அது அந்த எனர்ஜியை அப்படி திருப்பி அனுப்பும் செய்யும் ஒரு அறிவு சார்ந்த செயல்தான்.
  • அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த ஆற்றலை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான ஆற்றல் தான்  மூலஸ்தானம் ஆகும்.
  • பூக்கள், கற்பூரம், துளசி இதை சேர்த்து அங்கு செம்பில் வைக்கப்பட்டு கொடுக்கும் தீர்த்தமானது ஒரு கிருமி நாசினியாகும்.
  • இந்த தீர்த்தத்தை மூன்று தடவை கொடுக்க காரணம் முதல் சொட்டு உங்கள் தலையில் தெளித்து உங்கள் உடலை புண்ணியமாக்க, மற்ற இரண்டு சொட்டு உங்கள் உடலை பரிசுத்தமாக்க.
    கடவுளை வழிபடுவது ஏன்?
  • இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மக்களுக்கு எந்த வித நோயும் அவ்வளவு எளிதில் வந்தது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
  • ஒரு சில கோவில்களில் மேல் சட்டை அணிந்து வர கூடாது என கூறுவார்கள். அதற்க்கு காரணம் அந்த ஆற்றல் தான், கோவிலில் கிடைக்கும் ஆற்றலானது அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
  • பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
  • நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்கத்தால் செய்யப்பட்ட உலோகமானது இதயத்தின் வெளியே உள்ள நல்ல ஆற்றலை உள்வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.
  • பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பயணம் செய்தாலும், மூலவரான அந்த பகவானின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் நம்  உடலில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படும். அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள ஆற்றல்.
    கோவில் நடை பிரகாரம்
  • கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிற்க்கும் ஒரு நேரடி தொலைத்தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றுகிறது.
  • கோவில்களில் பெரும்பாலும் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் இருப்பதுதான். கோவில் கோபுரத்தில் இருக்கும் இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
  • எவர் ஒருவர் காலை, மாலை இரண்டு வேளையும் கோயிலுக்கு சென்று வருகிறாரோ அவரின் உடல் மட்டுமல்ல மனதும், மூளையும் சுத்தமாகும்.
  • எனவே இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு அனைவரும்  சென்று வழிபாட்டு நம் உள்ளதையும், உடலையும், பாதுகாத்துக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கற்றுக் கொடுப்போம்.
Previous Post Next Post