-->

கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தெரியுமா ?


கடவுளுக்கு அபிஷேகம் செய்வதின் அவசியம் 

ஆலயங்களில் கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த அபிஷேகங்கள் பல வகைப்படும், உதாரணமாக பாலபிஷேகம், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், தேன் போன்றவை. இந்த அபிஷேகங்கள் ஏன் செய்யபடுகின்றன என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள் அபிஷேகம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிந்து கொள்ளலாம்.


நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய வகை மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு (அதாவது செப்பு தகடு) பதித்து இருப்பார்கள். இந்த மந்திர தகடும், மூலிகையால் செய்யப்பட்ட மூலவர் சிலை மீது அபிஷேகம் செய்யும் போது அவை அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். தெய்வ சிந்தனை மேலோங்கும்.

அபிஷேகம் செய்யும்போது கோவில் கருவறையில் உள்ள காற்றில் அதிகபடியான ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் புத்துணர்ச்சியுடன் கூடிய பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி ஐயர்கள் சொல்லும் மந்திரங்கள் கடவுள் சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. மேலும் அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும், எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள்  சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

இதை மனதில் கொண்டே, கோவிலில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேகம் செய்வது எப்படி

ஒவ்வொரு கடவுளுக்கும்  ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அந்த அபிஷேகங்களுக்கு ஏற்றவாறு  பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொடுக்க வேண்டிய பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் கிடைக்ககூடிய பலன் இரட்டிப்பாகும் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

Previous Post Next Post