-->

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் செல்வம் குவியுமாம் எப்படி தெரியுமா?


கணவனின் காலை பிடித்து விடுதல்

சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் தேவியான மகாலட்சுமியானவள் சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்களப் பொருட்களில் வாசம் செய்கிறாள். மகாலட்சுமி காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் மனைவியாவாள்.



இவ்வளவு சிறப்பு வாய்ந்த லட்சுமி தேவி தங்கள் வீடுகளில் நிரந்திரமாக வாசம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். அதற்காக தங்கள் வீடுகளில் லட்சுமி தேவி புகைப்படத்தை வைத்து தவறாமல் பூஜைகள் செய்கின்றனர். மற்ற கடவுள் படங்கள் இல்லாத வீடுகளிலும், கடைகள், வணிக நிறுவனங்களிலும் லட்சுமி தேவி படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். லட்சுமி படம் இல்லாத வீடு மற்றும் கடைகளை பார்ப்பது அரிது.

இவ்வாறு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டுள்ள மகாலட்சுமி பாற்கடலில் தன் கணவரான மாஹா விஷ்ணுவின் காலை பிடித்து கொண்டு இருப்பது போல புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஏன் அவர் புகைபடத்தில் தன் கணவரான மாஹா விஷ்ணுவின் காலை பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். ஆனால் அதற்கான பதில் எல்லோருக்கும் தெரிவதில்லை.

அதன் ரகசியம் என்னவென்றால் ஆண்களின் கால் மூட்டு பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவரான சனி பகவானின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாகும். அதுபோல் பெண்களின் கை பாகம் அசுரர்களின் குருவான சுக்கிர பகவானின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று நமது முன்னோர்கள் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்.



ஆண்களின் கால் முட்டு பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனி பகவானின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாதலால், இப்பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம், செல்வம் சிறிது சிறிதாக வந்து சேரும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியே மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நீங்களும் தினமும் உங்கள் கணவனின் காலை பிடித்து விட்டு பாருங்க. அப்புறம் உங்கள் வீட்டில் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.



Previous Post Next Post