-->

மஞ்சளை பயன்படுத்துவதால் நம் உடலில் ஏற்படும் அற்புதங்கள்


நாம் அன்றாடம் மஞ்சளை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் 

நாம் உண்ணும் அனைத்து விதமான உணவுகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும், இயற்க்கை மருத்துவத்திலும் மஞ்சளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மஞ்சள் உணவிற்கு ருசியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கிறது.

மஞ்சள் அழகு குறிப்புகள்

மஞ்சளை நம் அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் வயிற்று வலி, வயிற்று போக்கு, சளி, இருமல், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.

எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் மஞ்சள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். உடலில் சூட்டினால் ஏற்படும் வீக்கம், கட்டி போன்றவற்றை கரைக்க மஞ்சள் பயன்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ பயன்கள்

மஞ்சள் தூள் நன்மைகள்
  • சொறி, சிரங்குகள்,ஆறாத புண்கள் அல்லது கட்டிகள் உள்ள இடத்தில் தினமும் மஞ்சளை பூசி வந்தால் விரைவில் குணமடையும். கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து குணமாகிவிடும்.
  • ஆணி கால் உள்ளவர்கள் ஒரு துண்டு மஞ்சள் , வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை, சிறிதளவு கற்பூரம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஆணி கால் உள்ள இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும்.
  • ஜலதோஷம், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சளைச் சுட்டு அதில் வரும் புகையை நுகர்ந்தால் விரைவில் குணமாகும்.
  • மஞ்சளை அரைத்து, இரவில் கை, கால், முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு கை, கால், முகத்தில் முடி வளர்வது நின்று விடும்.
  • மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.
  • நாம் அன்றாடம் குளிப்பதற்கு முன் குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து சிறிது நேரம் கழித்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம், அரிப்பு போன்றவை ஏற்படாது.
  • தினமும் குளிப்பதற்கு முன் சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்து அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் ஒரு பேக் போல் போட்டு ½  மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகம் பளிச்சிடும். கரும்புள்ளிகள், கருவளையம் இரண்டும் நாளடைவில் மறைந்துவிடும். முகச சுருக்கங்கள் ஏற்படாது.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து அந்த தண்ணீரை தினந்தோறும் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்து வந்தால் வீட்டில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். நோய் தொற்றும் ஏற்படாது.


Previous Post Next Post