-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - விருச்சிகம்


குரு பெயர்ச்சி விருச்சிக ராசி


எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

இது நாள் வரையில் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதன் தாக்கத்தால் நீங்கள் நினைத்தது யாவும் நல்ல படியாக நடந்தேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் கூட சுப காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்தேறும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் பெருமளவில் குறையும். உற்றார் - உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் கூட அகலும். பொருளாதார நிலை மேம்படும். இதனால் குடும்பத்தேவைகள் இனி வரும் காலங்களில் உடனுக்குடன் பூர்த்தி ஆகும். கொடுத்த கடன் கூட சிலருக்கு வசூல் ஆகும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த பின்னடைவுகள் சரியாகும். எனினும் ராகு/ கேதுக்களின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

குரு பெயர்ச்சி விருச்சிக ராசி 2019 பலன்கள்

24.1.2020 முதல் ஏழரை சனி முற்றிலும் விலகுவது உங்களுக்கு உண்மையில் ஒரு நல்ல திருப்பமாகவே இருக்கும். இதனால் தற்போது உள்ள நெருக்கடிகள் பெருமளவில் விலகும். ஏற்றம் ஏற்படும். வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படும். உங்களுக்கு இது நாள் வரையில் இடையூறாய் இருந்தவர்கள் விலகுவார்கள். சகல விதங்களிலும் நீங்கள் நன்மையை அடைவீர்கள். உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும் கூட எதிர்பார்க்கும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு இனி வரும் காலங்களில் கிடைக்கப்பெறும். பல பொது நலக்காரியங்களில் கூட ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலர் இறை வழிபாடுகள் அல்லது வெகு நாட்கள் நிறைவேற்ற வேண்டிய நேத்திக்கடனை கூட நிறைவேற்றி இறை அருளைப் பெறுவார்கள். பெரும்பாலும் அனைத்துத் தரப்பினரும் ஏற்றம் பெறுவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் பெருமளவில் உங்களுக்கு நன்மைகள் மேலோங்கும்.

பெண்கள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவி வரும்.திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமணம் நல்ல படியாக நடந்தேறும். பணவரவு தாராளமாகவே இருக்கும். இதனால் உங்களது தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலர் ஆடம்பர பொருள்களை கூட வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தேவைகள் அனைத்துமே நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் கிடைக்கப்பெறும்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாக குணம் ஆகும். உங்களது பணிகளை நீங்கள் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுகள் கூட இனி வரும் நாட்களில் குறையும். மொத்தத்தில் அனைத்து வகையிலும் நன்மைகளை நீங்கள் அடைவீர்கள்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாகத் தான் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கூட நல்ல படியாகக் கைகூடும். புத்திர வகையில் மகிழ்ச்சி நிலவும். எனினும் ராகு/ கேது பெயர்ச்சி சாதகமாக இல்லாத காரணத்தால் கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். மற்றபடி, சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட அடைபடும். மொத்தத்தில் உங்களது பொருளாதார தேவைகள் சிறப்பாகத் தான் இருக்கும்.

தொழில், வியாபாரம்:

கமிஷன் ஏஜென்சி, கான்டராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டாகும். பலருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். எனினும் ராகு/ கேது சஞ்சாரத்தால் கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெரிய தொகையை ஈடுபடுத்திக் கூட சிலர் லாபம் அடைவார்கள். மற்றபடி தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கப்பெறும். போட்டிகள், எதிர்ப்புகள் பல வகையில் குறைந்து உங்களை விட்டுப் போன பழைய வாடிக்கையாளர்கள் கூட இனி வரும் காலங்களில் உங்களை நாடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரையில் தாமதம் ஆகி வந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இனி வரும் நாட்களில் கிடைக்கப்பெறும். குடும்பத்தேவைகள் அனைத்துமே பூர்த்தி ஆகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கூட நல்லபடியாகக் கிடைக்கப்பெறும். எனினும் ராகு/ கேது சஞ்சாரத்தின் காரணமாக உயர் அதிகாரிகளிடம் பேசும் சமயத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் பேசுங்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு இந்தக் காலம் ஏற்றத்தை தரும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். நீங்களும் பல புதிய பொறுப்புக்களில் பங்கேற்று உற்சாகமாக செயல்படுவீர்கள். தலைமைக்கு கூட நெருக்கம் ஆவீர்கள். சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். எனினும் மேடை பேச்சுக்களில் பேசும் சமயத்தில் பார்த்து நிதானமாக பேசுவது நல்லது. காரணம் குரு பலம் இருந்தாலும் கூட ராகு/ கேது பெயர்ச்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனாலும், பேச்சில் மட்டும் நிதானத்தை கடைப்பிடித்து விட்டீர்கள் என்றால், மற்ற விஷயங்களில் குரு பலத்தால் நீங்கள் மாபெரும் வெற்றியை அடைவீர்கள்.

விவசாயம் செய்பவர்கள்:

விளைச்சல் சிறப்பாக அமையும். இதனால் நல்ல லாபங்கள் உண்டு. புதிய முயற்சிகள் கூட நல்ல விதத்தில் நடந்தேறும். கால் நடைகளால் நீங்கள் லாபத்தைப் பெற முடியும். கூலி ஆட்களால் சில பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தாலும் கூட அதனை சமாளித்து நீங்கள் வெற்றி அடைவீர்கள். மொத்தத்தில் நன்மைகள் பல வகையில் மேலோங்கும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் இது நாள் வரையில் இருந்து வந்த தடைகள் விலகும். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை நீங்கள் வெல்வீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று கூட படிப்பைத் தொடருவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். பெற்றோர் - ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இது மிகவும் அனுகூலமான காலம் என்பதால் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன் தான் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்துமே நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலர் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கூட நல்ல படியாக நடந்தேறும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். உத்யோகம், தொழில் சிறக்கும்.
எனினும் சனி மற்றும் கேதுவின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். அதேபோல, உற்றார் - உறவினர்களை கொஞ்சம் அனுசரித்துத் தான் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரணம் நீங்கள் எந்த அளவிற்கு படிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு சாதிக்கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது இதுவரையில் முயற்சி செய்தாலும் கிட்டவில்லையே என்ற ஏக்கம் மாறி இனி நீங்கள் செய்யும் சிறு முயற்சி கூட பெரிய அளவில் வெற்றியை குரு பலத்தால் தரும். அதனால் பழைய அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு முயற்சி செய்யாமல் போய்விடாதீர்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

24.1.2020
வரையில் சில விஷயங்களில் ஓரளவு மந்த நிலை காணப்பட்டாலும் கூட, மேற்கண்ட தேதிக்குப் பிறகு அனைத்து விதத்திலும் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். இதனால் எப்போதும் போல் உங்களது தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் காரிய வெற்றி உண்டு. 2 இல் கேது, 8 இல் ராகு என்கிற நிலை இருப்பதால் கணவன் - மனைவி இடையே மட்டும் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் - உறவினர்களால் அவ்வப்போது குடும்பத்தில் சிறு, சிறு குழப்பங்கள் வந்து போனாலும் கூட பெரிய பிரச்சனைகளுக்கு இடம் இல்லை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கூட இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபத்தை பெற்று விடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூட எதிர்பார்க்கும் உயர்வுகளை எல்லாம் முறைப்படி பெறுவார்கள். கொடுக்கல் - வாங்கல் கூட சரளமாக இருந்து வரும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட வசூலாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். இப்படியாக இந்தக் காலம் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மையை செய்யும் விதத்தில் தான் இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

முயற்சிகள் அனைத்திலும் எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தில் கூட நல்ல சுபிட்சமான நிலை காணப்படும். பண வரவு சிறப்பாகத் தான் இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்துமே உடனுக்குடன் பூர்த்தி ஆகும். கடன்கள் கூட படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதங்களில் நடந்தேறும். வியாபாரிகள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை பெறுவார்கள். எனினும் ராகு/ கேது சஞ்சாரம் காரணமாக உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வாருங்கள். எனினும் குரு பலத்தால் பெரிய அளவில் தீமைகள் வராது. உத்யோகஸ்தர்கள் தங்களது பணியில் திறம்படச் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். அரசு வழியில் கூட எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேரும். மாணவர்கள் முயற்சி செய்து படித்தால் பரிசுகளை கூட வெல்வார்கள். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும்பாலும் இந்தக் காலம் பொற்காலமாகவே இருக்கும்

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

பொருளாதார ரீதியாக ஏற்ற - இறக்கமான நிலையை நீங்கள் பெறுவீர்கள். கேது 2 லும், ராகு 8 லும் சஞ்சாரம் செய்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எனினும் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் எல்லாம் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இந்தக் கால கட்டத்தில் பெரிய முதலீடுகளை சிந்தித்து மேற்கொள்வது நன்மை தரும்.
கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் பெரிய தொகையை கடன் கொடுப்பதை கூடுமான வரையில் தவிர்க்கவும். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் பெரிய வேலை பளு இருப்பதை போலத்தோன்றும். ஆனால், இதற்கெல்லாம் பிற்காலத்தில் நீங்கள் நிச்சயம் நல்ல ஆதாயத்தை பெறுவீர்கள். இதை மனதில் வைத்து சோர்ந்து போகாமல் இருங்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை காணப்பட்டாலும் கூட போராடிப் படித்து வெற்றி பெறுவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் காலம் இது. ராகு/ கேதுக்கள் கூட பாதகமாக சஞ்சரிப்பதால் இந்தக் காலத்தில் குரு பலம் சற்றே குறைந்து காணப்படும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. இதனால் தேவை இல்லாத மருத்துவ செலவை நீங்கள் சந்திக்க வேண்டி வரும். எனினும், 3 ஆம் இடத்தில் சனி இருப்பதால் உங்களது பணத்தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். எதிர்பாராத இடத்தில் இருந்து எல்லாம் உதவிகள் சிலருக்குக் கிடைக்கப்பெறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கப்பெறும். அலைச்சல் இருந்தாலும் கூட ஆதாயமும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை போராடிக் காப்பீர்கள். இதனால் சமூகத்தில் அந்தஸ்து உண்டு. மாணவர்கள் கூடுதல் கவனம் எடுத்துப் படித்தால் நிச்சயம் அவர்களது முயற்சி வீண் போகாது. பெரும்பாலும் நன்மையே நடைபெறும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

பொருளாதார நிலை இந்தக் காலத்தில் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். பொன், பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்கள் நல்ல படியாக நடந்தேறும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக நடந்தேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் படிப்படியாகக் குறையும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பளவு உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். சிலருக்குத் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். 23.09.2020 முதல் ராகு/ கேது சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகலாம். முடிந்த வரையில் உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும்பாலான அளவில் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

சனி பகவானின் சஞ்சாரம் பல விதங்களில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து காணப்படும். பணம் பல வழிகளில் உங்களை தேடி வரும். சிலருக்கு, சொந்த வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ராகு / கேதுவின் சஞ்சாரம் மட்டும் சாதகமாக இல்லாத காரணத்தால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. சிலரது குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கூட நல்ல படியாக நடந்தேறும். அவ்வப்போது உற்றார் - உறவினர்களின் அன்பு அனுகூலம் தரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் கௌரவமான நிலை காணப்படும். அத்துடன் அவர்களது திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கப்பெறும். மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபம் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மற்றபடி, கொடுக்கல் - வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணை பெற இயலும். ராகு/ கேது சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் முடிந்தவரையும் நெருங்கியவர்களுடன் விவாதங்கள் அல்லது வாக்கு வாதங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

இந்த குரு பெயர்ச்சி முழுவதுமே ராகு/ கேதுக்கள் மட்டும் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் ராகு காலத்தில் துர்க்கையை நெய் தீபம் ஏற்றி அரளி சாற்றி வழிபட்டு வாருங்கள். அதே போல, விநாயகரை அருகம் புல் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். உடல் ஒத்துழைத்தால் சதுர்த்தி விரதம் கூட இருக்கலாம்.


வணங்க வேண்டிய தெய்வம் : முருகப்பெருமான்

ராசியான திசை : தெற்கு

ராசிக்கல் : பவளம்

ராசியான கிழமை : செவ்வாய்

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண்கள் : 1,2,3,9

Previous Post Next Post