-->

கிராம்பின் ஆரோக்கிய பயன்கள்


கிராம்பு 


கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும்  பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கிராம்பு இலவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கிராம்பு மருத்துவ நன்மைகள்


கிராம்பின் பயன்பாடு


கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத்  திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.

கிராம்பில் அடங்கியுள்ள சத்துக்கள்


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

கிராம்பில் யூஜெனோல் என்ற வேதிப்பொருள் 70 முதல் 90 சதவீதம் வரை உள்ளது. மேலும் அசிடைல் யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற எண்ணெய் பொருட்களும் கிராம்பில் உள்ளன. இதனால் தான் இதை பற்பசைகளிலும் பல் சிகிச்சை அளிக்கும் போது மயக்க மருந்தாக கொடுக்கின்றனர். அதே மாதிரி இருமல், காய்ச்சல், ஜலதோஷத்தையும் போக்க கூடியது கிராம்பு.

கிராம்பு எண்ணெய்


கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்ச்சியை தருகிறது.

கிராம்பு மருத்துவ பயன்கள்


வாய் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு

வாய் துர்நாற்றம், பல் வலி இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் பற்பசைகளில் உபயோகபடுத்தபடுகிறது. இதிலுள்ள ‘யூஜெனோல்’ அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற எடிமா பாதிப்புகளை போக்குகின்றன. இது ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

பாலியல் பிரச்சனைகளை தீர்க்கும்


விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கிராம்பு எண்ணெய்யை ஆண்கள் பிறப்புறுப்பில் தடவலாம். இது விந்து முந்துதலை தடுக்கும், மேலும் விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளையும் போக்கும். விறைப்புத் தன்மைக் கோளாறு உள்ளவர்களுக்கும் இந்த கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுவது நல்லது.

ஜீரண பிரச்சனை தீரும்

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகள் சரியான அளவில் சுரக்க கிராம்பு உதவுகிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

வாந்தி கட்டுப்படும்

கிராம்பை பொடி போல செய்து 1 டேபிள் ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள வேதிப்பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

தலைவலி குணமாகும்


பண்டைய கால மருத்துவமான யுனானி போன்றவற்றில் கிராம்பு தலைவலியை குணப்படுத்த பயன்படுகிறது. கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு குடிப்பது தலைவலிக்கு சிறந்த தீர்வாக. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தலையில் தடவினால் தலைவலி பிரச்சனை குணமாகும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி விடுவதால் தலைபாரம் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

வயிறு பிரச்சனைகள் தீரும்


வயிற்று பிரச்சனைகளான வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியமாக இருக்க கிராம்பு உதவுகிறது. உடலின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

புற்றுநோயை தடுக்கும்


கிராம்பில் உள்ள வேதிப்பொருட்கள் ஆரம்ப நிலையில் உள்ள நுரையீரல் புற்றுநோயை தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நுண்கிருமிகளை எதிர்த்து போராடும்


கிராம்பு மற்றும் அதன் எண்ணெய் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்து போராட கூடியது. வயிறு மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற கூடியது கிராம்பு.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது


உடலைப் பருமடையச் செய்யவும், உடலின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவவும், உடல் சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது.

கிராம்பு மருத்துவம்


காலரா குணமாகும்


4 கிராம் கிராம்பை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு பாதியாக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும்.

தொண்டை பிரச்சனைகள் தீரும்

சமையல் உப்புடன் கிராம்பை சப்பி சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு நீங்கி தொண்டை பிரச்சனைகள் தீரும. தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பை கிராம்பை சாப்பிட்டால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

சுவாச பிரச்சனைகள் தீரும்


கிராம்பு எண்ணெயை மூன்று துளி எடுத்து அதனுடன் தேன் மற்றும் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.
Previous Post Next Post