-->

மஞ்சளின் மருத்துவ குணங்கள்


மஞ்சள்

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சளாகும்.  மஞ்சள் 'ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கபடுகிறது. விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. மஞ்சள் உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும்.

மஞ்சளின் நன்மைகள்


அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த மூலிகை தான் மஞ்சள். இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ ஆகும். மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் கிடைக்ககூடிய பலவகையான பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

மஞ்சள் வளரியல்பு

மஞ்சள் செடி 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும். இது ஒரு பூண்டு வகை செடியாகும். இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து துளிர்த்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. இதனை தமிழர் சடங்குகளின் போது புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

பொதுவாக இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாமல், முக்கிய இந்திய சமையல்கள் நிறைவடையாது.

மஞ்சள் வகைகள்

மஞ்சளில் பல வகைகள் உள்ளன, அவற்றில் ஒரு சில வகைகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தபடுகிறது.

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், கப்பு மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. இவைகளில் ஆலப்புழை மஞ்சள்தான் உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

மஞ்சள் பயன்பாடு

கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும், சொறி. சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் வில்லை வில்லையாக தட்டையாக வாசனையாக இருக்கும், இது அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. முட்டா மஞ்சள் உருண்டையாக இருக்கும், இதை முகத்திற்கு போடுவார்கள்.

பண்டைய காலம் முதலே தமிழக பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். மாசு, மரு நீக்கி முகத்திற்க்கு பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகரான வேறு பொருளில்லை.

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது

மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக விளங்குவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன்படுத்துகின்றனர். இது முகம் மற்றும் உடலின் தேவையற்ற பகுதிகளில் முடிகள் வளர்வதை தடுக்கிறது.

தோலிற்கு பாதுகாப்பு கொடுக்கும்

மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு பாதுகாப்பும் கொடுக்கும். சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பாதங்களை மென்மையாக்கும்

பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக மாறும்.

வீக்கங்களை குறைக்கும்

உடலின் ஏதாவது பாகத்தில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினால் மறைந்துவிடும்.

கட்டிகளை உடைக்கும்

கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் பழுத்து உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து மிதமான சூட்டில், அடிபட்ட இடத்தில் தடவி வந்தால், வலியும், வீக்கமும் குறையும்.

அம்மை நோய் தாக்கத்தை குறைக்கும்

அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளை அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களை சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கபடும். 

தளர்ந்த வயிறை இறுக உதவும்

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப்புண் ஆறும், சளி பிரச்சனை தீரும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவுகளில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு மீண்டும் பழைய நிலையை அடைய இது உதவுகிறது. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

கிருமி நாசினியாக செயல்படுகிறது

முகத்தில் உள்ள தோல் சொரசொரப்புடன் இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வந்தால் தோல் மென்மையாக மாறும். நம் வீட்டு வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சளை கரைத்துத் தெளிப்பதற்கும், மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம். இது வீட்டுக்குள் கெட்ட கிருமிகள் வராமல் தடுக்கும்.

மஞ்சள் வகைகள்


பசியை தூண்டும்

மஞ்சள் பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கு உதவும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டது.

பற்பிரச்சணைகள் தீரும்

நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைக்கும். மஞ்சளை சுட்டு பற்பொடி போல செய்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான பல நோய்கள் குணமாகும்.  

விஷக்கடிக்கு சிறந்தது

மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், மற்றும் நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றின் மேல் பூச்சாக பூசி வந்தால், விஷம் இறங்கும்.

ஜலதோஷம் தீரும்

விரலி மஞ்சளைச் சுட்டு எரித்தால் வரும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், தலைவலி, தலைபாரம், தும்மல் போன்றவை  குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும். மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் இருக்கும் துர்நாற்றம் போகும்.  

Previous Post Next Post