-->

பெருங்காயத்தின் மருத்துவ நன்மைகள்


பெருங்காயம் 


பெருங்காயத்திற்கு என்று இந்திய சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது பெருங்காயம். பெருங்காயம் கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவை கொண்டதாகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இது ஆங்கிலத்தில 'அசப்போட்டிடா' என்று அழைக்கபடுகிறது.

பெருங்காயத்தூள்


பெருங்காயம் தயாரிப்பு


பெருங்காயம்  ஃபெருலா ஃபொட்டிடா  அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரான் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்புக்குள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மற்றும் மனமுள்ள பால் இருக்கும். இந்த செடி அழகான மஞ்சள் நிறம் கொண்ட மலர்களைக் கொண்டது. இந்த செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கபடுகிறது.

இந்த செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடன் அதன் தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைப்பார்கள். அதுதான் பெருங்காயம் எனப்படுகிறது. பெருங்காயத்தில் பால் பெருங்காயம், மற்றும் சிவப்பு பெருங்காயம் என இரு வகை உண்டு. இதில் பால் பெருங்காயம் தான் அதிக மதிப்புமிக்கது. 

பால் பெருங்காயமே, மிகுந்த வாசனையுடனும், காரத்துடனும் இருக்கும். பெருங்காயத்தில் உள்ள ஒலியோ ரெசின் எனும் வேதிப்பொருள் உடலுக்கு நன்மை தரக்கூடியது.
காரமும், கசப்பு சுவையும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் ஜீராணிக்க வைக்கும்.

பெண்களுக்குகான சிறந்த மருந்து


பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

புரதச்சத்து நிறைந்தது

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.


நரம்பு பிரச்சனைகளை தீர்க்கும்


நரம்புக் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக விளங்குகிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

பல் வலியை போக்கும்


பல் வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

நச்சுக்களை அழிக்கும்


உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.

பெருங்காயத்தூள்


ஆஸ்துமா பிரச்சனை தீரும்


ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும். வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு


பிரசவம் ஆன தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு பின்னர் சில நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு, வாணலியில் பெருங்காயத்தை வறுத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி, இஞ்சிச்சாறு மற்றும் பூண்டு சேர்த்து, சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால், அவர்களின் உதிரபோக்கு பாதிப்புகள் படிப்படியாக குறையும். மேலும் பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தி, மாதாந்திர சுழற்சியை சரியாக்கிவிடும் தன்மை படைத்தது.

மலச்சிக்கலை தீர்க்கும்


தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் இருமல் ஆகியவற்றை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.
Previous Post Next Post