-->

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடும் அதன் சிறப்புகளும்

 சரஸ்வதி பூஜையும் அதன் சிறப்புகளும் 

நாம் வணங்கும் தெய்வங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. நமக்கு கல்வி செல்வத்தை அள்ளி தரும் கடவுளாக விளங்குபவள் சரஸ்வதி தேவி ஆவாள். 

சரஸ்வதி பூஜை அன்று நம் வீடுகளிலும், தொழில் செய்யும் இடத்திலும் பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கமாகும். கல்வி, தொழில் சம்பந்தமான அனைத்திற்கும் நாம் முதலில் சரஸ்வதி தேவியை வணங்கிய பின்பு தொடங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.




கல்வி செல்வத்தை அள்ளித் தரும் சரஸ்வதி பூஜை

கல்வி பயிலும் மாணவ மாணவர்கள் சரஸ்வதியின் அருளை முழுமையாக பெறுவதற்கு புத்தகத்திற்கு சந்தனம்குங்குமம் பொட்டு வைத்து,  பூ வைத்து சரஸ்வதி தேவியின் மடியில் வைத்து கல்வி செல்வதை அள்ளி தருமாறு சரஸ்வதி தேவியை பணிந்து வணங்க வேண்டும்.  சரஸ்வதி தேவிக்கு பிடித்தமான மலரான வெண் தாமரையை வைத்து வணங்குவது சிறப்பு வாய்ந்ததாகும்.

புத்தகங்களை வைக்கும் போது வீட்டில் இருக்கும் கத்தி,உழக்கு,மத்து,போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும். இசையைத் துறையில் இருப்பவர்கள் அவரவர் பயன்படுத்தும் இசைக் கருவிகளையும் வைத்து அவற்றிற்கு பொட்டு வைத்து சந்தனம் தெளித்து பூ போட்டு வழிபட வேண்டும்.


சரஸ்வதியை தேவியை வழிபடும் முறை

சரஸ்வதி பூஜை அன்று நம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டை நன்கு சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.

பின் வீட்டின் வாயிலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை, தோரணம் கட்டி சரஸ்வதி தேவியை வரவேற்க வேண்டும். நம் வாகனங்களை சுத்தம் செய்து அவற்றிற்கும் பொட்டு வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.

பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

பூஜை அறையில் முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். குழந்தைகள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு  உதவும் ஆயுதங்கள், இயந்திரங்கள், இதர உபகரணங்களையும்  சிறப்பிக்க அவற்றை இறைவனடியில் வைத்து வழிபாடு செய்வதே ஆயுதபூஜையாகும்.

ஆயுத பூஜை அன்று சிறிய குடிசை தொழில் முதல் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து இடத்திலும் தாங்கள் உபயோகபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் தொழில் கருவிகளை சுத்தம் செய்து, பின் அவற்றிற்கு சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து, பூ வைக்க வேண்டும். சரஸ்வதி தேவியின் படத்திற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.

பின்னர் நெய்வேத்தியம் செய்வதற்காக செய்யப்பட அனைத்தையும் ஒரு வாழை இலையில் வைக்க வேண்டும். முக்கியமாக பொரி கடலை, அவல். வடை, பாயாசம், பழங்கள் போன்றவையும் படையலில் இடம் பெற வேண்டும். 

பூஜையில் கட்டாயம் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பூஜை செய்யும் போது வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் சரஸ்வதி தேவியை போற்றி பாடல்கள், மந்திரம், போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

பூஜை முடிந்து பின்பு நாம் சரஸ்வதி தேவிக்கு நெய்வேத்தியமாக வைத்து படைத்தவற்றை அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு சரஸ்வதி தேவியை வழிபட்டு வாழ்வில் அனைத்து கல்வி, செல்வத்தை பெற்று சரஸ்வதி தேவியின் முழு அருளை பெறுவோம்.

Previous Post Next Post