-->

பலர் முன்னிலையில் மேடையில் அழுத கீர்த்தி சுரேஷ்


சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது 'நடிகையர் திலகம்' என்னும் படத்தில் பழம் பெரும் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அச்சு அசலாக சாவித்திரி போலவே உள்ளார் கீர்த்தி சுரேஷ். நேற்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், தனுஷ்டன் நான் நடித்த 'தொடரி' படத்தைப் பார்த்துத்தான் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார்.

தொடரி

தொடரி' படத்தில் நான் அழுததையும், சிரித்ததையும், பார்த்து அந்தப் படத்தில் நான் நடித்த சரோஜா கதாபாத்திரம் சரமாரியாகக் சமுக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விமர்சனங்களும் வந்தன. ஆனால், அந்த படத்தில் நான் ஏற்ற சரோஜா கதாபாத்திரம்தான் 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நான் நடிக்கக் காரணமாக அமைந்தது.

நடிகையர் திலகம்

அவருக்கு முன் பேசிய 'நடிகையர் திலகம்' படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி, “கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என முதலில் அறிவிப்பு வந்தவுடன் சமூக வலைத்தளங்களில் 'என்ன கொடுமை இது' என அவரை விமர்சித்து வசைபாடியவர்கள் அதிகம்.

கீர்த்தி சுரேஷ் கண்ணீர்

மதன் கார்க்கி

மதன் கார்க்கியின் பேச்சைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் கண்கள் கலங்கின. ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளாமல் முடிந்தவரை சமாளித்து பொங்கிய கண்ணீரை கைகுட்டையால் துடைத்து கொண்டார். மேலும் மதன் கார்க்கி, கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் அஹா, ஓஹோ என பாராட்டிப் பேசப் பேச கீர்த்தி சுரேஷ் அழுதார்.


சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷை விமர்சித்த பலர், இன்று பழைய சாவித்திரியை பார்த்த மாதிரி அப்படியே இருக்கிறார் எனப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Previous Post Next Post