-->

ஆர்யாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என மேடையில் பகிரங்கமாக அறிவித்த நடிகை

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா


எங்க வீட்டு மாப்பிள்ளை

‘கலர்ஸ்’ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யாவுக்கு பெண் பார்க்க எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தினர். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிராகரிப்பு
இந்த 16 பெண்களுக்குள்ளும் யார் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள போவது என பல போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ‘அகாதா, சூசனா, சீதாலட்சுமி’ ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வாகினர். இவர்களில் யாரவது ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீடீர் என இந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்தால் மற்ற இரண்டு பெண்களும் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று கூறி மூன்று பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ளாமல் நிராகரித்தார் ஆர்யா.
விமர்சனம்
ஆர்யாவின் இந்த செய்கையால் மிகவும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இவரை தொடந்து விமர்சித்து வந்தனர். 3 பெண்களை திருமண ஆசை கூறி மேடை வரை அழைத்து வந்து, ஏமாற்றி விட்டதாக கடுமையான வார்த்தைகளால் சமுக வலைதளங்களில் விமர்சித்தனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை

நான் திருமணம் செய்து கொள்கிறேன்
இந்நிலையில் நடிகர் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ள சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யாவும் கலந்துகொண்டார்.
இதே நிகழ்ச்சியில், சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமியும் கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் பேசிய வரலட்சுமி "ஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்" என்று மேடையிலேயே விளையாட்டாக கூறினார்.
"ஆனால் அங்கிருந்தவர்கள் அந்த 3 பெண்களையும் போல உன்னையும் ரிஜெக்ட் செய்துவிடுவார்" என வரலட்சுமியை கலாய்த்துவிட்டனர். சந்திரமௌலி படத்தில் வரலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா செய்தது சரியா? உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள். மற்றும் உங்கள் நபர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற 'Subscribe' செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்.


Previous Post Next Post