-->

மேடையில் அழுத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி

சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து தற்போதும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதிகள். மண் மனம் மாறாத கிராமிய பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்து வருகிறார்கள்.

வீர தமிழச்சி

கடந்த வாரங்களில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை தங்களது பாட்டால் மெய்சிலிர்க்க வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் வீர தமிழச்சி என்று பட்டத்தையும் பெற்றார் ராஜலட்சுமி.

புரோமோ வீடியோ

இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோவில் ராஜலட்சுமி வெறும் 32 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அதனால் இந்த வாரம் ராஜலட்சுமி எலிமினேட் ஆவது உறுதி என சூப்பர் சிங்கர் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த  அந்த வீடியோவில் டேஞ்சர் ஜோன்னுக்கு ராஜலட்சுமியும், சக பாடகி அபர்னாவும் வந்துள்ளார்கள்.

விலகுகிறேன்

இந்த வீடியோவில் பேசும் ராஜலட்சுமி  நான் மக்களிடம் மனதார கேட்கிறேன் எனக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம், எனக்கு பதில் அபர்னாவிற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் நான் சரியான ஆள் கிடையாது, நான் போட்டியிலிருந்து விலகுகிறேன்என்று அழும் காட்சி அந்த வீடியோவில் காண்பிக்கபட்டுள்ளது.

திடீரென ராஜலட்சுமி அப்படி சொன்னதும் அவரது கணவர் செந்திலும், மற்றும் நடுவர்களும் கண்கலங்கி போய்யுள்ளனர். என்ன நடக்க போகிறது என்பது என்று இந்த வாரம் நடைபெறும் நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
Previous Post Next Post