-->

சினேகா பட்ட கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை - நடிகர் பிரசன்னா

 சினேகா மற்றும் பிரசன்னா

எங்க வீட்டு மாப்பிள்ளை
‘கலர்ஸ்’ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யாவுக்கு பெண் பார்க்க எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரசன்னா
இதில் ‘அகாதா, சூசனா, சீதாலட்சுமி’ ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வாகினர். இதில் நேற்று நடந்த இறுதி போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ‘சினேகா, பிரசன்னா’ ஜோடி வந்திருந்தனர். இதில் பங்கேற்று பேசிய ‘பிரசன்னா’ அனைவரையும் தன்னுடைய பேச்சால் கவர்ந்து விட்டார்.

பிரசவ வலி
சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது தனக்கு அனைத்து பெண்கள் மீதான மரியாதையும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரசவ வலியில் அவரை பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது. மேலும் சினேகாவுக்கு இயற்கையான முறையில் பிரசவம் ஆகவில்லை.

அதனால் பிரசவ வலியை கூட்ட அதற்குரிய ஊசியை டாக்டர்கள் போட்டனர். அதுவரை சினேகாவுடன் இருந்து ஆறுதல் கூறிக்கொண்டு இருந்த எனக்கு டாக்டர் பிரசவ வலியை அதிகரிக்கும் பெரிய ஊசியை எடுத்தவுடன் அதை பார்த்து தலையே சுற்றிவிட்டது.

தெய்வம்
அதுவரை தைரியத்துடன் இருந்த நான் சிநேகா படும் வேதனையை பார்க்க முடியாமல் ஓரமாக போய் உட்கார்ந்து விட்டேன். நமக்கு சாதாரணமாக வரும் தலைவலியையே நம்மால் தாங்க முடியவில்லை. அப்படியெனில் பெண்களின் பிரசவ வலி எப்படி இருக்கும். ஒவ்வொரு தாயும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை என்று பிரசன்னா கூறியதை கேட்டு அனைவரும் அவரது கருத்தை ஆமோதித்து கை தட்டினர்.
Previous Post Next Post