-->

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் கடந்து வந்த பாதை

ராஜலட்சுமி செந்தில் கணேஷ்

கிராமிய பாடல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடிகள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர்.இவர்களுடைய சிறப்பே மண் மனம் மாறாத கிராமிய பாடல்கள்தான். மேடை நிகழச்சிகளில் சந்தித்த பிரபலங்கள் மற்றும் தங்களின் திறமையின் மூலமும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகின்றனர்.
செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ் ஒரு எம்.ஏ.பட்டதாரி. இவர் கலபம் செல்லத் தங்கையா என்பவரின் குழுவில் இணைந்து கிராமிய பாடல்கள் பாடி வந்தார்.
ராஜலட்சுமி
ராஜலட்சுமி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளி. இவர் பள்ளிப் பருவம் முதலே நாட்டுப்புறக் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் அம்மா வீட்டு வேலை செய்து இவரை படிக்க வைத்திருக்கிறார். 
கிராமிய பாடகி ராஜலட்சுமி

நாயகன்
கலபம் செல்லத் தங்கையா அவர்கள் திருடு போகாத மனசு என்கிற படத்தை இயக்கினார். அதில் செந்தில் கணேஷ் தான் ஹீரோ. அந்த படத்தில் கதாநாயகிக்கு தோழியாக ராஜலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றியடையவில்லை. பின்பு செந்தில் கணேஷ் 2வதாக நடித்த படம் கரிமுகன்.
காதல் மற்றும் திருமணம்
தன்னுடன் இணைந்து பாடல் பாடிக்கொண்டும் தன்னுடைய படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டும் இருந்த  ராஜலட்சுமியின் மீது செந்திலுக்கு காதல் உருவானது. ராஜலட்சுமியும் அவர் மீது காதல் வசப்பட்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிவடைந்தது. செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
ராஜலட்சுமி நாற்புற பாடல்

சமுக பொறுப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் தீவிரமடைந்த போது, ஒரு கர்ப்பிணி பெண் நிறைமாத கர்ப்பத்தோடு கும்மி பாட்டு பாடி, தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார். அவர் வேறும் யாருமில்லை இந்த ராஜலட்சுமிதான்.

இசை நிகழ்ச்சியை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் இந்த தம்பதிகள் வாழ்வில் மேலும் மேலும் வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்.
Previous Post Next Post