-->

வடிவேலுவுக்கு தடை போடா தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்

ஷங்கர் வடிவேலு

இம்சை அரசன் 24ம் புலிகேசி
வடிவேலு நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வடிவேலுவுக்கு கடைசியாக ஒரு வாரம் கால அவகாசம் அளித்துள்ளது. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படம் பற்றிய அறிவிப்பு வெளியிட்டவுடன் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் எல்லாம் வெளியிட்டனர்.

விலகல்
அதன் பிறகு வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு படம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் 1 கோடி
இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மேலும் மேற்கொண்டு ரூ.1 கோடி கொடுத்தால் தான் படத்தில் நடிப்பேன் என வடிவேலு தெரிவித்து விட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அதிர்ச்சியடைந்தாராம்.

ஷங்கர் அதிர்ச்சி
மேலும் இது குறித்து ஷங்கர் கூறியிருந்ததாவது வடிவேலு படத்தை விட்டு விலகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை சரிகட்ட அவர் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார். இந்நிலையில் வடிவேலு மேலும் ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ரெட் கார்டு
இதை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு இறுதியாக ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளதாம். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதில் ஏதாவது ஒன்றை அவர் செய்ய மறுத்தால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படுமாம்.
Previous Post Next Post