-->

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் விராட் கோலி

விராட் கோலி மன்னிப்பு

விராட் கோலி
11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தை மட்டுமே பிடித்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பெங்களூர் அணி சரியாக விளையாடாமல், ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. அணி சரியாக விளையாட முடியாததற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். 
ட்விட்டரில் பதிவு
வலுவில்லாத பந்துவீச்சு, பேட்டிங் சரியில்லாத காரணங்களால் இந்த முறை பெங்களூர்  அணி மோசமான செயல்பட்டதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் தோல்விக்குப் பின் ஊடங்கங்களுக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் விராட் கோலி, அவர் கூறியதாவது
ரசிகர்களிடம் மன்னிப்பு
எங்களால் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம் என்று கூறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் விளையாடிய விதம் என்னை மனரீதியாக மிகவும் வேதனைப்படுத்தியயும், காயப்படுத்தியும் இருக்கிறது. பெங்களூர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாம் மாறும்

இதுவும் வாழ்க்கையின் ஒருபகுதிதான். அடுத்த சீசனில் நாம் எப்படி விளையாட வேண்டும், தயாராக வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடும், அதிகமான பலத்தோடும் களமிறங்கி விளையாடுவோம் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கோலி அதில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post