-->

இதை படித்தால் பப்பாளியை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள்

பப்பாளி


சாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பழம் பப்பாளி.ஆனால் இந்த பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்ககூடிய ஒரு பழமாக உள்ளது. மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது.
மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பப்பாளியின் மருத்துவ குணங்கள்:

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி பெரிதும் உதவுகிறது.மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு அதிகரிக்கவும் பப்பாளி பயன்படுகிறது.
கண் சம்மந்தமான அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்ககூடியது பப்பாளி. அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.
பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் உடனே ஆறும்.
கறுப்பு நிறத்தில் மணிமணியாக இருக்கும் பப்பாளி விதைகளை அரைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நாக்குப்பூச்சிகள் தொல்லை விலகும்.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால் வீக்கம் விரைவில் கரைவதை பார்க்கலாம்.பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் காணப்படுவார்கள்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும்.
பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.


பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

பப்பாளிப் பழத்தை தேனில் தேய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.


Previous Post Next Post